இது போதும்…

அன்புள்ள சாரு நிவேதிதா, நான்  ஆரம்ப கட்ட வாசகன் ஆகையால் எனக்கு உலக இலக்கிய புத்தகங்கள் மற்றும் தமிழ் இலக்கிய புத்தகங்கள் அறிமுகப்படுத்த வேண்டுகிறேன்.தற்போது உங்களையும் மற்றும் ஜெயமோகன், ராமகிருஷ்ணன்  எழுத்துக்களை படித்து வருகிறேன்.எனக்கு மேலும் இலக்கிய அறிமுகம் தேவை.ஆகையால் உலக இலக்கிய புத்தக பெயர்களை வரிசைப்படுத்தி தரவும். இப்படிக்கு தங்கள் அன்புள்ள வாசகன். மூவரையும் தொடருங்கள். அது போதும். சாரு

புத்தரும் விநாயகரும்: சிறுகதை: அராத்து

புத்தர் : மிஸ்டர் விநாயகா , நான் தான் நீ என்கிறார்கள். அம்மா அப்பாவைச் சுற்றி விட்டு , டகால்டி செய்து என் சகோதரனை ஏமாற்றும் பழக்கம் எனக்கு இல்லை . நெஞ்சம் பற்றி எரிகிறது விநாயகர் : ஹேய் , ப்ரூ , மேஜிக்கல் ரியலிஸம் தெரியாதா ? புத்தர் : ப்ரூ , மேஜிக்கல் ரியலிஸம் தெரிந்த ஆட்கள்தான் இப்படி விளையாடுகிறார்கள். விநாயகர் : கூல் ப்ரூ , அராத்துன்னு ஒரு ஆள் இருக்கான். … Read more

பாபாகாவின் புதிய நாவல்: அத்தியாயம் 2

2 இப்ராஹிமின் சிறுகதையொன்றை பெருங்கதையாக நிரவிக்கொண்டிருந்தார் மைந்தன். அவருக்கு இப்போழுதெல்லாம் கதை சொல்லுவதே தொழிலாகிப் போய்விட்டது. ஒரு நாள் அவர் மனைவியிடம் ஒரு ஊருல ஒரு இட்லி இருந்தது என்று கதை சொல்ல ஆரம்பித்த போது அவரது மனைவி பயந்தே போனாள். அவருக்காக கேஸரோலில் வைத்திருந்த ஐந்து இட்லிகளில் நான்கை அன்று மதியம் எடுத்து இரண்டாம் சிற்றுண்டிப் பசியில் அவள் விழுங்கிவிட்டாள். அதை சொல்லிக்காட்டத்தான் அந்தப் பரிதாபமான கதை ஆரம்பித்தது. இப்ராஹிம் எழுதிய தீ ஏன் சொட்டியது … Read more

வேடிக்கை பார்க்கும் பூனை…

நான் சொல்வதை உங்களில் பலருக்கு நம்ப முடியாமல் இருக்கலாம்.  நம்புவதோ நம்பாமல் இருப்பதோ அவரவர் விருப்பம்.  கொஞ்ச நேரத்துக்கு முன்புதான் ஒரு நண்பர் இன்னொரு நண்பரின் முகநூல் பதிவை எனக்கு அனுப்பி இதைப் பொருட்படுத்த வேண்டாம், வேலையைப் பாருங்கள் என்று சொன்னார்.  ஐயோ, அவரை நான் ப்ளாக் செய்து பல ஆண்டுகள் ஆயிற்றே என்றேன்.  அந்த நண்பரை என் எழுத்து எப்படித் துன்புறுத்தியிருக்கிறது என்பதை மட்டும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.  துன்புறுத்தினால் துன்புறுத்துபவரின் எழுத்தைப் படிக்காமல் … Read more

ஜெயமோகனின் கடிதம்

நேற்று வாட்ஸப்பில் ஜெயமோகனின் கடிதம் ஒன்றை காயத்ரி எனக்கு அனுப்பியிருந்தாள். அவளுடைய அப்பாம்மை கதை பற்றி. சந்தோஷமாக இருந்தது. ஏனென்றால், ஜெயமோகன் மற்றும் என்னுடைய ரசனை இரண்டும் இருவேறு துருவம் என்பது ஊர் அறிந்த விஷயம். நான் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் மரியோ பர்கஸ் யோசாவை அவருக்குப் பிடிக்காது. இப்படி ஆயிரம் உதாரணம் சொல்லலாம். ஆனால் அவ்வப்போது நாங்கள் இருவரும் சந்தித்துக் கொள்வதும் உண்டு. காயத்ரியின் அப்பாம்மை கதை ஜெயமோகனுக்குப் பிடித்திருந்தது என்று அறிந்து மகிழ்ச்சி. … Read more