ஈகோவினால் ஆன பயன்

மோகினிக்குட்டிக்காகஎதையும் செய்வேன்அவளுக்கும் தெரியும் ஒருநாள் போதையில்அவள் தட்டிலிருந்து எடுத்துசாப்பிட்டு விட்டேன்எனக்குத் தெரியாதுமறுநாள் சொன்னாள்எனக்குப் பிடிக்காது போதையில் நிகழ்ந்த சிறு தவறுஎனச் சொன்னாலும்அவள் மனம் மாறவில்லை நானோ ரோஷக்காரன்’ஆ, நீதானே உனக்கு வெட்கம் மானம்சூடு சொரணை ரோஷம் எதுவுமில்லை’யென்றுஒரு கவிதையில் எழுதியிருந்தாய்’ எனக்கேட்காதீர்அது வேறுஇது வேறுரெண்டையும் குழப்பக் கூடாது ஆங், நான் ரோஷக்காரன்அவள் தட்டை இனித் தொடேன்ஒருநாள் உணவகத்தில்சிக்கன் கபாப் சொன்னாள்ஆறு துண்டு வந்ததுமூணு நீ எடு எனப் பகிர்ந்தாள்கபாப் எனக்கு உயிர்பசியும் கொடூரம்ஆனால் இப்போது பசியில்லை என்றேன்அவள் … Read more

‘ப்யூட்டிஃபுல்’

ரிஷிநீ ஏன் காதலில் விழக்கூடாது என்கிறேன், தெரியுமா?‘உயிர்வாதை’ படித்து விட்டுஇறைவி அனுப்பியிருந்தஇறைவசனம்:’ப்யூட்டிஃபுல்’ டேய் டேய்இக்காலத்துப் பெண்கள்அத்தனை பேரும்ஒன்றுரோபாட்டுகள்அல்லதுஏஐயின் பிரதிபிம்பம்கிளம்பி வாரெண்டு பேரும்பாங்காக் போய் விடலாம்நீ ஓவியம் வரைந்து திரவியம் தேடுநான் ஜிகிலோவாக ஊழியம் செய்துகாசு பார்க்கிறேன் இன்னொரு விஷயம்இதையெல்லாம் வைத்து நீஓவியம் வரைந்தால்பல கோடி போகும்ஐயமில்லைஆனால்அதைப் பார்க்கும்ரசிகர் கூட்டத்துக்குநிச்சயம் பிடிக்கும்பைத்தியம்

உயிர் வாதை

அன்பேநீ என்னருகில் தொடுகின்றதொலைவில் இருக்கிறாய்அவ்வப்போதுஉன் கூந்தலின் நறுமணம்என்னுயிரைத் தழுவுகிறதுஉன் பின்னங்கழுத்தின் ஒளிஎன்னைப் பித்தனாக்குகிறதுஉன் வதனத்தின் திவ்யம்என்னுள்ளத்தை வெறியூட்டுகிறது உன் கைவிரல்களின் நடன பாவம்என் சுயத்தை மறக்கச் செய்கிறதுஉன் சுவாசத்தின் தீண்டல்என் முகத்தில் ஒளியூட்டுகிறதுஆனாலும் இறைவியேநீதொட முடியாத தூரத்தில் இருக்கிறாய்உன் முத்தத்தில் எனை இழந்துகாலத்தை மறந்து வாழ முடியாதோ?உன் பாதக்கமலத்தில் முகம் பதித்துபக்தியில் திளைக்க முடியாதோ?உன் நிதம்பச் சுவையினிலேஎனை மறக்க முடியாதோ? இத்தனை துயர் தாங்கிஇந்த உயிர் வாழ வேண்டுமா?காதலினால் உயிர் மாய்த்தோர்கதைகள் பல கேட்டதுண்டுஆனால், இறைவியே,இன்று அவர்களில்நானும் … Read more

சுமைகளை இறக்கி வைப்போம்!

அன்பேஉன்னிடமொரு பிரார்த்தனைஉனக்கு நான் ஏதேனும்நன்மை செய்வதாய்த் தோன்றினால்நன்றியறிதல் கொள்ளாதேஅக்கணமே அதை மறந்து விடுநாய்களுக்குமுண்டு நன்றியறிதல்மனித இனம் விலங்கினும் மேன்மையுடைத்து! என்ன செய்யலாம்?அடுத்தவரைத் துன்புறுத்தல்மானுட அடையாளமாய்மாறி விட்ட காலத்தில்துன்பம் கொடுக்காதிருக்கலாம்அல்லதுஅதைக் குறைக்கலாம்அல்லதுஅன்பு பூண்டொழுகலாம்ஆனால்ஒருபோதும்நான் செய்யும் இனிய செயல்உன் தோள்மீதுபாரமாய் ஏறி விடக் கூடாதுஏறினால்,அதுநிபந்தனையற்ற என்அன்பின்பிரியத்தின்காதலின்வீழ்ச்சியாகும்எனக் காண்பாய்!

இன்று என்ன கிழமை? என்ன மாதம்?

அது எப்படி எல்லா நாளும்ஒரே நாளைப் போல் இருக்கிறது? ஐந்து மணிக்கு எழுகிறேன்காலைக்கடன் முடித்துஇருபது நிமிட தியானம்பூனைகளுக்கு உணவிடுகிறேன்சில கவிதைகளைப் படிக்கிறேன்ஓரிரு கவிதைகள் எழுதுகிறேன்ஏழரை மணிஅதே சாலைகளில் நடைஅதே மனிதர்கள்ஏர்ப்பாடில் அதே இசை ஏழே முக்கால்சங்கீதா உணவகம்மீடியம் காஃபிகடைசி வாயில் இனிப்பு எட்டு மணிஅவள் அழைக்கிறாள்நடந்தபடி ஒன்பது வரை பேசுகிறேன் வீடு திரும்பிபூனைகளின் மலம் அள்ளிபைகளில் போட்டுவெளியே வைக்கிறேன் சின்ன வெங்காயம் நறுக்கிபழைய சோறில் உப்பிட்டுநீராகாரம் அருந்துகிறேன் ஒன்பதரைமனையாள் எழுந்து வருகிறாள்வீடு பெருக்கி சுத்தம் செய்கிறாள்அவளுக்கும் நீராகாரம் … Read more