Hina ki kushboo
ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், காதல், துள்ளல், ரகளை, அட்டகாசம், குதூகலம் எல்லாம் ஒருங்கே இந்தப் பாடலில். கேட்டால் ஆடாமல் இருக்கவே முடியாது.
ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், காதல், துள்ளல், ரகளை, அட்டகாசம், குதூகலம் எல்லாம் ஒருங்கே இந்தப் பாடலில். கேட்டால் ஆடாமல் இருக்கவே முடியாது.
அரசாங்கத்திடம் என்ன கோரிக்கை வைக்கிறீர்கள் என்று கேட்டார்கள். ஜெயமோகனையும், எஸ். ராமகிருஷ்ணனையும் பல்கலைக்கழகத் துணைவேந்தர்களாக ஆக்க வேண்டும் என்று சொன்னேன். மனுஷ்ய புத்திரன்? நம் கோரிக்கை இல்லாமலேயே ஆகி விடுவார். பகுதி 1 பகுதி 2
மனுஷ்ய புத்திரன், முகநூலில்: அந்த காலத்தில் ஞானிகள், ரிஷிகள் இருந்தார்கள். அத்தகைய ஞானத்தை வழங்கும் நவீன ஞானிகளாகவும் ஆசான்களாகவும் திகழ்பவர்கள்தான் இன்றைய எழுத்தாளர்கள். – சாருநிவேதிதா (நியூஸ் 7) ஜெயமோகனை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு எழுத்தாளர்களை வரையறுப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். என்னையெல்லாம் ரிஷி என்றால் உலகம் தாங்குமா? ***
இன்று மாலை ஏழு மணிக்கு நியூஸ் 7 தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பில் பேசுகிறேன். எழுத்தாளர்களுக்கு ஒரு அரசாங்கம் என்னென்ன செய்யலாம் என்பது பற்றிப் பேச இருப்பதால் சுவாரசியமான மனநிலை ஏற்படுகிறது. நிகழ்ச்சியின் பெயர் களம் 2016. உபதலைப்பு வேட்பாளர் பெருமக்களே! அவசியம் கேட்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.