புத்தக விழா

நேற்று ஷார்ஜா புத்தக விழா சென்றேன்.  இது ஒரு சர்வதேசப் புத்தக விழா இல்லை.  மத்திய கிழக்கு நாடுகள், மக்ரிப் நாடுகள் மற்றும் கேரளம் தமிழ்நாடு மட்டுமே கலந்துகொள்ளும் விழா.  அதிலும் மக்ரிப் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில்தான் இன்றுபெருமளவில் இலக்கிய நூல்கள் எழுதப்படுகின்றன. அவை அனைத்தும் இந்தவிழாவில் கலந்து கொண்டும் மருந்துக்குக் கூட ஒரு ஆங்கில நூல் இல்லை.  அரபிநூல்கள் மட்டுமே உள்ளன.   தமிழ் அரங்கில் என் நூல்கள் வைக்கப்பட்டுள்ளன.  ஆனால் தமிழர் யாவரும் திருவள்ளுவர் மற்றும் வைரமுத்துநூல்களையே வாங்கினர்.  ஆனால் போட்டோ மட்டும் என்னுடன் எடுத்துக் கொண்டனர்.  நல்லவேளை, திருவள்ளுவர் வைரமுத்து நூல்களில் என் கையெழுத்து வாங்கவில்லை.  கேட்டிருந்தால் ஒரு கையெழுத்துக்கு200 திர்ஹாம் வாங்குவதாகப் பொய் சொல்லியிருப்பேன்.  

எதார்த்தம் 5

இளங்கோவனுக்கு என் எதிர்வினை டியர் இளங்கோவன் I can’t ask Ramjee or Gayathri to write to Ubud because zero degree publishing publishes a lot many writers and I never mix friendship with Literary affairs. 66 வயது வரை என்னை UBUD அமைப்பினர் அழைக்காததையே நான் அவமானமாகக் கருதும் போது – அதிலும் நானே விழா அமைப்பாளர்களுக்குக் கூச்சத்தை விட்டுக் கேட்டும் ஒரு பதிலும் வராத நிலையில் … Read more

எதார்த்தம்

சிங்கப்பூர் அரசு நூலகத்தில் என்னுடைய சிறுகதைத் தொகுப்பு ஒன்று வைக்கப்பட்டுள்ளதை நண்பர்கள் ஆரவாரத்துடன் பகிர்ந்துள்ளனர். இதில் மகிழ்ச்சி அடைய ஒன்றுமே இல்லை. சினிமாவில் ரஜினி எப்படியோ அப்படி எழுத்தில் சுஜாதா. அவ்வளவாக எழுதப் படிக்க தெரியாத என் அம்மாவே ஜுஜாதா கதை பிடிக்கும் என்று சொல்லி எழுத்துக் கூட்டி எழுத்துக் கூட்டி படிப்பார்கள். அந்த எழுத்துலக சூப்பர் ஸ்டார் இதயப் பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் கையில் ரெண்டு லட்சம் இல்லாததால் மணி ரத்னம் … Read more

பூனைகள்

எங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பில் சுமார் 15 பூனைகளுக்கு உணவிட்டு வருகிறோம். அதற்காக நாங்கள் வாங்கும் ஏச்சும் பேச்சும் கொஞ்சநஞ்சம் அல்ல. இன்னும் அடி வாங்காத குறைதாம். அந்தப் பூனைகள் காலையிலும் மாலையிலும் சாப்பிட்டு விட்டு எங்கோ போய் பதுங்கி விடும். யார் கண்ணிலும் படாது. இருந்தாலும் எங்களைக் கரித்துக் கொட்டுகிறார்கள். நிற்க. இதனிடையில் புஸ்ஸி ஒரு மாதம் முன்னால் 3 குட்டி போட்டு மூன்றையும் காப்பாற்றிக் கொண்டு வந்து விட்டு விட்டது. மழையிலும் கார் சக்கரத்தாலும் குட்டிகள் … Read more

Sharja Book Fair

ஷார்ஜா புத்தக விழாவுக்கு நான் 30 அக்டோபர் 31 மற்றும் 1 நவம்பர் ஆகிய மூன்று தினங்களும் வருவேன். என் கையெழுத்து வேண்டுவோர் இதைப் ப்யன்படுத்திக் கொள்ளுங்கள்.