பழுப்பு நிறப் பக்கங்கள் – சி.சு.செல்லப்பா – பகுதி 5

சில ஆண்டுகளுக்கு முன்பு மகாபலிபுரத்தில் ஓர் அரசியல் கட்சியின் மாநாடு நடந்தபோது மாநாடு நடத்திய தொண்டர் ஒருவரும் சுற்றுவட்டாரப் பகுதியில் வசித்த தலித் ஒருவரும் கலவரத்தில் இறந்து போனது சோமையாஜுலுவின் பாதயாத்திரைகளைப் படித்தபோது எனக்கு ஞாபகம் வந்தது. அப்போதைய போராட்டங்களை அஹிம்சை என்ற அறத்தையும் சத்தியம் என்ற தர்மத்தையும் இரண்டு கண்களாகக் கொண்ட காந்தி என்ற மகா மனிதர் வழி நடத்தினார். அப்படிப்பட்ட உன்னதமான ஒரு காலகட்டத்தை தத்ரூபமாக நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார் செல்லப்பா. … Read more

பழுப்பு நிறப் பக்கங்கள் பற்றி அசோகமித்திரன்

ஏப்ரல் 15 அன்று தி இந்து தொடரில் பழுப்பு நிறப் பக்கங்கள் பற்றி அசோகமித்திரன் எழுதியுள்ளார். – ஸ்ரீராம் http://bit.ly/1p4KPFX

தமிழும் ஆங்கிலமும் : அறிவுஜீவிகளை முன்வைத்து…

பல காலமாக நான் எழுதி வரும் ஒரு விஷயம், தமிழ்நாட்டின் சீரழிவுக் கலாச்சாரத்துக்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக இருப்பவர்கள் – தமிழ் தெரியாமல் ஆங்கிலம் மட்டுமே தெரிந்து கொண்டிருக்கும் புத்திஜீவிக் கும்பல்.  (இன்னும் மோசமான வார்த்தைகளில் திட்டத்தான் கை இழுக்கிறது.  லிங்கனையும் காந்தியையும் எண்ணிக் கொண்டு மனக்கட்டுப்பாட்டுடன் கும்பல் என்று மட்டுமே சொல்கிறேன்.  மற்றபடி நீங்கள் எல்லா கெட்ட வார்த்தைகளையும் போட்டுக் கொள்ளலாம்.)  மிக முக்கியமாக, அந்த ஆங்கில அறிவுஜீவிக் கும்பலின் முட்டாள்தனம் சகிக்க முடிவதில்லை.  … Read more

இதை விட வேறு என்ன வேண்டும்?

http://charuonline.com/blog/?p=4356 மேலே கண்டுள்ள இணைப்பில் உள்ள கட்டுரையைப் படிக்காமல் இதைப் படித்தால் புரியாது.  எனவே அதைப் படித்து விட்டு இதைத் தொடரவும். சரவணன் சந்திரனின் ’ரோலக்ஸ் வாட்ச்’ நாவல் பற்றி எழுதப்பட்ட மதிப்புரையை பலரும் நான் எழுதியதாகவே நினைத்து விட்டனர்.  அதில் ”ஒரு நாலு சீட் தள்ளி இருந்தவர் வாசிப்புப் பழக்கம் உள்ளவர் போல. நான் தூங்கிய நேரத்தில் அவர் ’ரோலக்ஸ் வாட்ச்’சை எடுத்து வாசிக்க ஆரம்பித்திருக்கிறார். நாலு அத்தியாயம் படித்திருக்கிறார். அதற்குள் அவர் இறங்கவேண்டிய இடம் … Read more