சார்பட்டா பரம்பரை (தொடர்ச்சி)

(நேற்று எழுதிய சார்பட்டா விமர்சனத்தின் தொடர்ச்சியாக இதை வாசிக்கவும்) சார்பட்டா பரம்பரையை நேற்றும் இன்னொரு முறை பார்த்தேன்.  இப்படி ஒரே படத்தை அடுத்தடுத்த நாளில் பார்த்தது இதுவரை நடந்ததில்லை.  அதுவே இந்தப் படத்தின் மிகப் பெரிய வெற்றி.  இரண்டாவது முறையாகப் பார்த்த போதுதான் படத்துக்கு நேற்று நான் எழுதிய சிறிய மதிப்புரை அதன் சிறப்புக்கு நியாயம் செய்ததாகாது எனத் தோன்றியது. சார்பட்டா படத்தைப் பார்க்கும் அத்தனை பேரையும் ஈர்த்த ஒரு பாத்திரம்: டான்சிங் ரோஸ்.  தமிழ் சினிமாவில் … Read more

கிண்டில் டிவைஸ் (சிறுகதை)

பொதுவாக மாணாக்கர்தான் ஆசிரியரின் வாழ்க்கை வரலாற்றை எழுதுவார்.  ஆனால் சீனி சொல்லும் கதைகளைப் பார்த்தால் நானே அவரது வாழ்க்கையை எழுதி விடுவேன் போலிருக்கிறது.  அப்படிப்பட்ட நம்ப முடியாத கதைகள்.  இதையெல்லாம் நீங்கள் நாவலாக எழுதலாமே என்பேன்.  “என் வாழ்க்கையைப் பற்றி நான் எழுதக் கூடாது என்று தீர்மானமான முடிவு எடுத்திருக்கிறேன், அதனால் நீங்கள் வேண்டுமானால் தாராளமாக எழுதிக் கொள்ளலாம்” என்று சொன்னார்.  பலமுறை சொல்லியிருக்கிறார்.  சீனியின் கதையை விட அவர் தந்தையின் கதை இன்னும் பல மடங்கு … Read more

சார்பட்டா பரம்பரை

நேற்று சார்பட்டா பரம்பரை பார்த்தேன். படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் விரிவாக எழுத நேரமில்லை. இன்னொரு காரணம், கருந்தேள் ராஜேஷ் போன்ற நண்பர்கள் எழுதுவதே என் அபிப்பிராயத்தை ஒத்திருப்பதால் எதற்கு நேர விரயம் என்று நினைக்கிறேன். காலா, கபாலி என்ற இரண்டு பாவங்களை ரஞ்சித் இந்தப் படத்தின் மூலம் கழுவி விட்டார் என்று ஒரு நண்பர் முகநூலில் எழுதியிருந்தார். எனக்குமே அப்படித்தான் தோன்றியது. மெட்ராஸ் என்ற படம் எவ்வளவு சுவாரசியமாக இருந்ததோ அதே சுவாரசியம் சார்பட்டாவிலும். … Read more

பொருள்வெளிப் பயணம் – 3

www.bittalk.in மேற்கண்ட இணையப் பத்திரிகையில் நான் எழுதி வரும் பொருள்வெளிப் பயணம் தொடரின் மூன்றாவது கட்டுரை வந்துள்ளது. மற்ற இரண்டையும் கூட வாசித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அதேபோல் bynge.in செயலியை மொபைல் போனில் டவுன்லோட் செய்து அதில் வெளிவந்த அ-காலம் தொடரின் 27 அத்தியாயங்களையும் படித்துவிடும்படி கேட்டுக் கொள்கிறேன். அதே bynge.in இல் வரும் 29 முதல் என்னுடைய புதிய நாவலான நான்தான் ஔரங்கசீப்… -இன் அத்தியாயங்கள் வெளிவர உள்ளன.

ஓப்பன் பண்ணா… பற்றி அராத்து

அமேசான் பென் டூ பப்ளிஷ் போட்டியில் நம்பிள் ஓப்பன் பண்ணா நாவல் முதல் பரிசு பெற்றிருக்கிறது. முதல் 5 இடங்களுக்குள் வருவது முதல் மற்றும் பெரும் சவால். ஏனென்றால் அமேசான் அல்காரிதம் நமக்குத் தெரியாது. இப்போது கூட பாருங்கள் ஒரு நாவல் 15 ரிவ்யூக்கள் மட்டுமே பெற்று முதல் 5 இடங்களுக்குள் வந்திருக்கிறது. வழக்கமான பழக்கமான என் வாசகர்களைத் தாண்டி பொது வாசகர்களையும் ஈர்க்கும்படி இருக்க வேண்டும் என்பது சவால். ஆனால் நான் அப்படி ஏதும் மெனக்கெடவில்லை. … Read more

கிண்டில் பென் டு பப்ளிஷ் போட்டியில் முதல் பரிசு பெற்ற நாவல்

https://www.amazon.in/pen-to-publish-contest/b?ie=UTF8&node=13819037031 கிண்டில் பென் டு பப்ளிஷ் போட்டியில் 5 லட்சம் ரூபாய் முதல் பரிசு பெற்ற நாவல் ஓப்பன் பண்ணா. எழுதியவர் அராத்து. ஒரு மனிதனின் உளவியல் சிக்கலை இந்த அளவு நுணுக்கமாக அணுகிய ஒரு நாவலை என் வாசிப்பு அனுபவத்தில் நான் கண்டதில்லை. அது மட்டும் அல்லாமல் புகழின் வெளிச்சத்துக்கு உள்ளே ஒரு மனிதன் எந்த அளவு அந்தகாரத்தில் வாழ்கிறான் என்பதற்கான ஒரு நேரடி ஆவணம் ஓப்பன் பண்ணா. தமிழில் எனக்கு இப்படி ஒரு நாவல் … Read more