நான்தான் ஒளரங்கசீப் – அராத்து

“நான் ஒழுக்கமானவன் என்ற பலத்தின் அஹங்காரமே என் கண்களை மறைத்து விட்டது “- ஔரங்கசீப். சாரு எழுதி வரும் நான் தான் ஔரங்கசீப்பின் வெளிவராத ஒரு அத்தியாயத்தை வாசித்துக்கொண்டு இருந்தேன். இந்த வரியில் மனம் நின்று விட்டது. இந்த வரியை ஔரங்கசீப் சொல்லியிருப்பாரா , தெரியாது. ஔரங்கசீப் மூலம் சாரு நிவேதிதா சொல்கிறார். யோசித்துப் பார்த்தால் சாரு நிவேதிதாவின் ஒட்டு மொத்த எழுத்துக்களின் ஆதார ஸ்ருதியாக இந்த வரியை எடுத்துக்கொள்ளலாம் என்று தோன்றுகிறது. தான் ஒழுக்கமாக இருப்பதாக … Read more

நான்தான் ஒளரங்கசீப் – மதுரை அருணாச்சலம்

எனக்கு மொபைல் திரையில் படிப்பதென்பது மிகவும் கடினமான காரியம்.. கணினித்திரையில் படிப்பதும் பிடிக்காது. பலமுறை முயன்றும் தோற்றிருக்கிறேன்.. இத்தனைக்கும் அது 21 இன்ச் மானிட்டர்.. அது சாருவின் புதிய நாவலான ” நான் தான் ஒளரங்கசீப் ” bynge app இல், பல அத்தியாயங்கள் வெளிவந்து பல நாட்கள் ஆகியும், வேறு வழியின்றி இன்று காலை மொபைலில் இருந்து செயலி மூலமாக முதல் பாகத்தை மட்டும் என்னுடைய மெயிலுக்கு அனுப்பி, கணினித்திரையில் வாசித்து அசந்தே விட்டேன். அடுத்தடுத்த … Read more

என் வாசக நண்பர்களுக்கும், முஸ்லீம் நண்பர்களுக்கும்,

Bynge.in என்ற செயலியில் என்னுடைய நாவல் “நான்தான் ஔரங்கசீப்…” தொடராக வெளிவந்து கொண்டிருப்பதை அறிவீர்கள் என்று நம்புகிறேன்.  ஞாயிறு, புதன், வெள்ளி ஆகிய கிழமைகளில் வாரம் மூன்று முறை வருகிறது.  ஒவ்வொரு நாளும் எத்தனை பேர் படிக்கிறார்கள், எத்தனை மதிப்புரைகள் வந்துள்ளன என்ற விவரங்களும் தினந்தோறும் எனக்கு வந்து விடுகின்றன.  அவற்றை நான் பார்ப்பதில்லை.  இன்று பார்த்தேன்.  இதுவரை 36330 வாசிப்புகள்.  நேற்று 1678 பேர் வாசித்திருக்கிறார்கள்.  இதுதான் ஒருநாளில் மொத்தமாக வாசித்தவர்களின் எண்ணிக்கை. என் பெயருக்காக … Read more

ஔரங்கசீப்பை முடித்துக் கொள்ளலாமா?

இன்று காலை இப்படி ஒரு கடிதம் வந்தது. எழுதியவரின் பெயரை எப்படியோ தொலைத்து விட்டேன். மெஸஞ்ஜரில் வந்தது. ஔரங்கசீப் கீழ்த்தரமான பதிலைச் சொன்னதாக எனக்கு ஞாபகம் இல்லை. தான் செய்த அத்தனை செயல்களும் பாபகரமானவை, ஹராமானவை என்று தன் கடிதங்களில் புலம்பித் தள்ளியிருக்கிறார் ஔரங்கசீப். இது போன்ற கடிதங்கள் ஔரங்கசீப்பின் பெயரை மாற்றி கலாம் பெயரை வைப்பவர்களுக்கும், மாணவர்களின் பாடப் புத்தகங்களில் ஔரங்கசீப்பை கொடூரமான வில்லனாகக் காண்பிக்கும் இந்துத்துவவாதிகளுக்கும்தான் பயன்படும். இதுபோல் இன்னும் கடிதம் வந்தால் தொடரை … Read more

வசந்த் சாய் – பாயசம்

நவரசாவில் இடம் பெற்றிருக்கும் எட்டு படங்களையும் பற்றிய விமர்சனங்களைப் பார்த்து விட்டு அந்த எட்டையும் பார்க்க வேண்டாம் என்று முடிவு செய்தேன். என் நண்பர் வசந்த்தின் பாயசத்தை மட்டும் இன்னும் இரண்டொரு நாள் கழித்துப் பார்க்கலாம் என்று திட்டம். ஔரங்கசீப் நாவலில் மூழ்கிக் கிடப்பதால் அப்படி நினைத்தேன். ஆனால் இடையில் செய்த ஒரு பிழையால் உடனடியாக வசந்த் சாயின் பாயசம் மட்டும் பார்த்தேன். என்ன பிழை என்றால், பிரபு காளிதாஸின் விமர்சனத்தை என் முகநூல் பக்கத்தில் ஷேர் … Read more