ஸ்மாஷன் தாரா: முன் வெளியீட்டுத் திட்டம்

ஒரே நேரத்தில் இச்சைகளின் பிரேதப் பரிசோதகனாகவும், ஞானத்தின் ஜ்வாலையை நாவால் தீண்டுகின்றவனாகவும் மொழியில் இயங்குவது ஒரு வரம். உன்மத்தத்தின் அதீதம் காதலில் ஒரு தாசபாவத்தைக் கொணர்ந்து விடுகிறது. இவை யாவும் கலையில் நிகழ்த்தப்படும் போது மொழி ஒரு உருவமற்ற அரங்கமாக மாறுகிறது. நிழல்களும் பிம்பங்களும் ஒரு புகை நடனமாக மேக உருவுகளின் ஓயாத சலன இசையாக வெளிப்படுகின்றன. காலம் ஒரு நீர்க்கடிகாரமாய் மழையாகவும் ஆவியாகவும் வானத்திற்கும் பூமிக்குமாக பொழிவதும் பறப்பதுமாக சாருவின் கவிதைகளில் இயங்குகிறது. இது வாழ்வின் … Read more

அப்போதும் இப்போதும்

நட்சத்திர எழுத்தாளர் என்கிறார்கள். கூட்டத்தில் என்னையே இறுதியாய்ப் பேச வைக்கிறார்கள். இடையிலே பேசினால் கூட்டம் போய் விடுமாம். ஆரோவில்லில் கொண்டாட்டம் என்றால் தனிப்பட்ட அழைப்பு இல்லாமலேயே 80 பேர் வருகிறார்கள். ஐஃபோன் இல்லை என்று எழுதினால் மறுநாளே ஒரு புதிய ஐஃபோனை வீட்டுக்கு வந்து கொடுக்கிறார்கள். (சிங்கப்பூர் சிவக்குமார்). ஔரங்ஸேப் நூறு அத்தியாயம் முடித்ததும் நூறு ஆயிரம் கொடுக்கிறார்கள் (பொள்ளாச்சி சிவபால கணேசன்). நீங்கள் என் கடவுள். நீங்கள் என் ஆசான். நீங்கள் என் ஞானத்தந்தை. தினந்தோறும் … Read more

நிழலைத் தொலைத்தவனின் பிராது: சாரு நிவேதிதா & ஆத்மார்த்தி

1நான் சொல்லப் போகும் பிராதினைநீங்கள் நம்ப மாட்டீர்கள் என்றெனக்குத் தெரியும்.உங்களுக்கு வேறு வழியில்லை என்பதனால்நீவிர் நம்பித்தான் ஆக வேண்டும்அறிக; எனக்குப் பொய் சொல்லத் தெரியாதுஅதைவிட எது பொய்எது உண்மையெனப் பிரித்தறிகின்ற சூட்சுமமும்தெரியாதுஆகவே  இதை நீங்கள் நம்பியாக வேண்டும்ஏனெனில்எனக்கு உங்கள் உதவி தேவைநமக்குள் இருபுறப் புரிதல் இல்லையேல்நீங்கள் எனக்கு உதவ இயலாதுகவனமாகக் கேளுங்கள்நம்பிக்கையுடன் கேளுங்கள்அப்போதுதான் எனக்கு உதவுவது பற்றி நீங்கள்தெளிவு கொள்ள முடியும். 2சமீப காலமாக என் நிழலைக் காணோம்எப்போது தொலைத்தேன்எவ்விடத்தில் தொலைத்தேன்என்றெதுவும் தெரியவில்லைசன்னலினூடே வந்து விழுகின்ற கிரணங்களிலொன்றுஎப்பொதும் … Read more

ஔரங்ஸேபும் டால்ஸ்டாயும்

அன்புள்ள சாரு… ஒரு கூர்மையான வாசகன் “கூடு விட்டுக் கூடு பாய்தல்” என்பதை உங்கள் எழுத்துகளில் பல இடங்களில் காண முடியும் என்றாலும் 106ஆவது அத்தியாயத்தை கண்டிப்பாக சாரு எழுதும் வாய்ப்பு கிடையாது. கடித உதாரணமாக சாருவாகிய நீங்கள் இலக்கிய கடிதங்கள் எத்தனையோ கொடுத்திருக்க முடியும் Letter to a Hindu என்ற டால்ஸ்டாய் கடிதத்தை அந்த இடத்தில் ஒளரங்ஸேப் மட்டுமே நினைவுகூர்ந்திருக்க முடியும் அந்தக் கடிதத்தைப் பெற்ற தாரக் நாத் தாஸ் மிகப் பெரிய வங்காள … Read more

ஒரு நேர்காணல்

ரயிலைப் பிடிக்கும் அவசரத்தில் ஓடுபவர்களின் வேகத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறேன்.  மின்னஞ்சல்களுக்கு பதில் கூட எழுதவில்லை.  ஔரங்ஸேப் சம்பந்தமாக ஒரு அவசர வேலை.  ஆனாலும் வாசகசாலை நண்பர்கள் நேர்காணல் என்று அழைத்ததால் போய் விட்டேன்.  ஆறு மணிக்குத்தான் நேர்காணல் என்றாலும் பன்னிரண்டுக்கே அண்ணா நகர் கிளம்பி விட்டேன்.  மதிய உணவை ராம்ஜி பட்டியாலா ஹவுஸில் வாங்கிக் கொடுத்தார்.  நான் பஞ்சாபி உணவின் தீவிர விசிறி.  சாப்பாடு பிரமாதமாக இருந்தது.  நேர்காணலுக்கு நிறைய நேரம் இருந்ததால் கிங் ரிச்சர்ட் … Read more