ஒரே ஒரு கேள்வி (குறுங்கதை மாதிரி)

அந்த நண்பர் ஹைதராபாதில் வசிக்கிறார். பால குமாரனின் தீவிர பக்தர்.  ஆம், பக்தர்.  ஒரு கட்டத்தில் அவருக்கு குருவை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று ஆர்வம் வந்தது.  (அவரே சொன்னது.)  மாற்றிக் கொண்டார்.  நான்தான் அவர் தேர்ந்தெடுத்த புதிய குரு.  ஹைதராபாதுக்கு விமான டிக்கட் போட்டு வரவழைத்தார்.  டிக்கட் வந்த போது அவரிடம் கேட்டேன், ரிட்டன் டிக்கட் அனுப்பவில்லையே நீங்கள்? நீங்கள் இங்கே வந்த பிறகு சாவகாசமாகப் போட்டுக் கொள்ளலாம் சாரு. 2010 டிசம்பர் 31.  ஹைதராபாத் … Read more

சாருவின் படைப்பின் நோக்கம்: நிர்மல்

சாருவின் படைப்புகளுக்கு நோக்கம் எதுவும் இல்லை என்றும், அதிர்ச்சி அளிப்பது மட்டுமே அதன் நோக்கமாக இருக்கக் கூடும் என்றும் பலர் கருதுகிறார்கள். இது குறித்து என்னுடைய சில புரிதல்களைக் கோர்த்துள்ளேன். தனி மனித விடுதலை என்பது ஒருவரின் ஈகோவைக் கடப்பது மட்டுமல்ல, மற்றவர்களை ஆதிக்கம் செலுத்தத் தூண்டும் உணர்விலிருந்தும் விடுபடுவதுதான். நம் அடையாளம், அறிவு, அழகு, செல்வம், சமூக அமைப்பு, அரசு, அதிகாரங்கள், பதவி, உறவுகள் என இவைகள் மூலம் நாம் மற்றவர்கள் மீது அதிகாரம் செலுத்துகிறவர்களாக … Read more

வதைகளின் கலைஞன்: வளன் அரசு

சாருவுக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கப்படுவதாக அறிவித்தவுடன் பல்வேறு கொண்டாட்டங்களும் சர்ச்சைகளும் நிலவிவருகிறது. என்னைப் பொருத்த வரை எனக்கு மிகுந்த ஆச்சரியம் என்றாலும் பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சாருவை நான் என் தந்தையாக பாவித்து வருவதால் வாழ்த்துகள் சொல்வது அபத்தமாக இருக்கும். இப்போதுதான் இந்தியா வந்துவிட்டு திரும்பியதால் அடுத்த விடுமுறைக்கு இரண்டு ஆண்டுகளாவது காத்திருக்க வேண்டும். இல்லையென்றால் டிசம்பர் மாத விருது நிகழ்வுக்கு கண்டிப்பாக வந்திருப்பேன். தமிழ் இலக்கிய உலகில் எழுத்தாளர் என்ற நிலைக்கு உரியவர் சாரு நிவேதிதா … Read more

இதுதான் நான்…

இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. எல்லா மனிதர்களுமே இப்படித்தான் இருந்திருப்பார்கள், ஈகோ, பணம், அதிகாரம் போன்றவற்றின் அறிமுகம் இருந்திராவிட்டால். வளன் அரசுவின் கட்டுரையிலிருந்து… இப்படி எதிர்ப்பின் அடையாளமாக இருக்கும் சாரு ஓர் ஆன்மீகவாதி என்பதை முதலில் என்னாலும் நம்ப முடியாமல் இருந்தது. ஆனால் எங்களுடைய முதல் சந்திப்பில் அவர் கூறிய வாசகம் நெஞ்சைவிட்டு இன்னும் நீங்க மறுக்கிறது: “இந்தியா மாதிரியான ஒரு நரகத்தில் வாழும் போது கடவுளின் காலைக் கட்டிப் பிடித்துக் கொள்ள வேண்டும்; இல்லையென்றால் … Read more

சிறந்த பாராட்டுகளில் ஒன்று…

என்னுடய கல்லூரி முதல் ஆண்டு மிகவும் வறட்சியாக இருந்தது. தஞ்சாவூரில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கல்லூரி என்பதாலும் நான் ஒரு கத்தோலிக்கக் குரு மாணவன் என்பதாலும் நண்பர் வட்டம் மிகவும் சிறியது. இந்த நிலையில்தான் தமிழ்தாசன் எனக்கு ஆசிரியராக அறிமுகமானார். ஆரோக்கியதாஸ் என்ற இயற்பெயர் கொண்ட தமிழ்தாசன், தஞ்சை மறைமாவட்டத்தைச் சார்ந்த கத்தோலிக்கப் பாதிரியார். பாதிரியார் என்பதனால் பெரிதாக வெள்ளை அங்கி அணிந்து, அன்பே உருவாகி, எப்போதும் பிரசங்கம் செய்துகொண்டிருப்பவராகக் கற்பனை செய்துகொள்ளக்கூடாது. அவர் தன் சொந்த முயற்சியில் … Read more

சாருவைப் புரிந்து கொள்வது எப்படி? : காயத்ரி

Warning: நீண்ட பதிவு மற்றும் சாருவைப் பிடிக்காதவர்கள் அப்படியே இதைக் கடந்து போக கேட்டுக் கொள்கிறேன். நான் படித்துப் புரிந்துகொண்ட சாருவை கூடிய மட்டும் சொல்ல விழைந்திருக்கிறேன்.* சாருவின் புனைவெழுத்தில் இதுவரை பரிச்சயம் இல்லாதவர்களுக்கு எனக்குத் தெரிந்ததை இங்கு சொல்ல முயற்சிக்கிறேன். தமிழில் உள்ள மற்ற புனைவுகளைப்போல் சாருவின் புனைவுகளை அணுகினால் ஒன்றும் புரியாது. ஏமாற்றம்தான் மிஞ்சும். சாரு தன்னுடைய கட்டுரை ஒன்றில்: “மார்க்கி தெ ஸாத் (Marquis de Sade), வில்லியம் பர்ரோஸ் (William Burroughs), … Read more