விடை பெற்றுக்கொண்ட தூரத்து நண்பன் (சிறுகதை)

நான் மதுவின் மயக்கத்தில் இருக்கும்போது மரணச் செய்தியை கேள்விப்பட்டால் மிகவும் பாதிக்கப்பட்டு விடுகிறேன். அப்படிக் கிடைத்த முதல் மரணச் செய்தி சுஜாதா குறித்தது. நானும் மணியும் கவுண்டமணியும் கலங்கரை விளக்கத்தின் கீழே நின்று பேசிக்கொண்டிருந்தோம். நான் கடும் போதையில் இருந்தேன். மணி வேறோர் நண்பரிடம் ஏதோ பிஸினஸ் பேசிக்கொண்டிருந்ததால் நானும் கவுண்டமணியும் கலங்கரை விளக்கத்தின் எதிரே போய் நின்று ஏதோ அளவளாவிக்கொண்டிருந்தோம். யாரோ சுஜாதாவின் மரணச் செய்தியை என்னிடம் தெரிவித்தார். அடுத்த க்ஷணம் அந்த மரணச் செய்தியைத் … Read more