இனி வேண்டாம்…

நீங்கள் ஒரு நாவலை எழுதி முடிக்கிறீர்கள்.  அதற்கு ஒரு வெளியீட்டு விழா நடத்த விரும்புகிறீர்கள்.  தப்பே இல்லை.  நான் பாட்டுக்கு என் எழுத்து உண்டு, நான் உண்டு என்று யார் வம்புக்கும் போகாமல் இருந்து கொண்டிருக்கிறேன்.  உங்கள் புத்தக வெளியீட்டு விழாவுக்கு என்னை அழைக்கிறீர்கள். அது முதல் தப்பு.  ஏனென்றால், உங்கள் புத்தகத்துக்காக நான் மூன்று தினங்களை இழக்க வேண்டியிருக்கிறது.  அந்த தினங்களில் நான் என்னுடைய புத்தக வேலையைச் செய்திருப்பேன்.  செய்திருந்தால் புத்தக விழாவில் என்னுடைய ஒன்றிரண்டு … Read more

நாவல் வெளியீட்டு விழா குறித்து செல்வகுமார் கணேசன்

1) ந. முருகேச பாண்டியன் தமிழின் தற்கால படைப்புகள் பெரும்பாலானவற்றை படித்திருக்கிறார்.  அதைப் பற்றி அறிமுகங்களையும் தவறாது பதிவு செய்துவிடுகிறார்.  படிப்பதில் சோம்பேறியாக இருக்கும் பலருக்கு அவரை ரோல்மாடலாக கொண்டு வாசித்தால் நல்லது. பெரும் வாசிப்புப் பழக்கம் இருந்தும், அது அவரை கடினத்தன்மை இன்றி ஜோவியலாக, எப்போதும் புன்சிரிப்பு உடைய மனிதராக வைத்திருப்பது ஆராய்ச்சிக்கு உரியது  🙂  கார்ல் மார்க்ஸின் அரசியல் பதிவுகளை விட்டுவிட்டு நாவலைப் பற்றி மட்டும் பேசுகிறேன் என்று தொடங்கினார்.  நாவல் குறித்தும், அதிலிருக்கும்  … Read more

பச்சை மிளகாயை முன்வைத்து ஒரு erotic கவிதை : நிர்குண்

(நிர்குண் ஒரு நாளில் இதுபோல் முப்பதிலிருந்து நாற்பது கவிதைகள் எழுதுகிறார். எல்லாவற்றையும் தொகுத்தால் ஒரு ஆண்டில் இருபது முப்பது தொகுதிகள் வரும். நிர்குண், விரைவில் இதையெல்லாம் தொகுப்பாகக் கொண்டு வாருங்கள் – சாரு) July 28, 2025 Charu Nivedita 1 எல்லாம் ஒரு திட்டத்தில் நடக்கிறது என்கிறான் பெருங்கவிஞன் ’ஒரு பறவை வீழ்ந்தாலும் அதில் திட்டமுண்டு இப்போது நடக்கும் என்றால் நடக்காது இப்போது நடக்காது என்றால் நடக்கும் 2 அப்படித்தான் நடந்தது அந்தச் சந்திப்பு ஈருடல் … Read more

கடந்த காலம்

முப்பத்தைந்து ஆண்டுகள் இருக்கும். மெரினா கலங்கரை விளக்கத்தின் கீழே அந்தப் பெண்ணின் காரில் கென்னி-ஜியைப் போட்டு விட்டு, காரிலிருந்து இறங்கி நின்று கொண்டே ஒன்பது மணியிலிருந்து பதினோரு மணி வரை சர்வதேச இசை பற்றிப் பேசிக்கொண்டிருப்பேன். பத்து ஆண்டுக் கால நட்பு. பிறகு என் எழுத்தின் மீது குற்றம் சாட்டி விட்டுப் பிரிந்து விட்டாள். நண்பர்களுக்காக எழுத்தில் சமரசம் செய்து கொள்ள முடியுமா? பிரிந்து இருபத்தைந்து ஆண்டுகள் இருக்கும். வாரம் ஒருமுறையாவது வீட்டுக்கு வந்து விடுவாள். அவந்திகா … Read more