saturday night fever… (இன்னும் கொஞ்சம் சேர்த்திருக்கிறேன்)

கடந்த 25 ஆண்டு தாம்பத்ய வாழ்வில் இன்றுதான் முதல்முறையாக அவந்திகா தன் அம்மா வீட்டில் இரவு தங்குவதற்குப் போயிருக்கிறாள். ஏனென்றால், நாளை ஞாயிற்றுக்கிழமையும் ட்ரில்லிங் போடுவார்களாம். நான் மாலை நேரங்களில் வெளியே செல்ல நேர்ந்தால் அரை மணி நேரத்துக்கு ஒருமுறை போன் செய்து எப்போது வருவாய் என்று கேட்டுக் கொண்டே இருப்பாள் அவந்திகா. அதிலும் பத்து மணி ஆகி விட்டால் பத்து நிமிடத்துக்கு ஒருமுறை வரும் போன். அதனால் அதிகபட்சம் பத்தரைக்கே விழுந்தடித்துக் கொண்டு ஓடி வந்து … Read more

தெருநாய் வாழ்க்கை

மீண்டும் கொடூரமான முறையில் ட்ரில்லிங் போட ஆரம்பித்து விட்டார்கள். அவந்திகா இந்த முறை ஃபிட்ஸ் வருவதற்கு முன்பே சட்டென்று கீழே இறங்கி இந்த வளாகத்துக்கு வெளியே போய் விட்டாள். பிறகு இன்று பகல் முழுவதும் நாகேஸ்வர ராவ் பூங்காவில் அமர்ந்து படித்துக் கொண்டிருக்கிறேன் என்று சொல்லி அங்கே போய் விட்டாள். இப்படி இந்திய வாழ்க்கை நாய்ப் பிழைப்பாகப் போய்க் கொண்டிருக்கிறது. போலீஸில் புகார் செய்தோம். போலீஸ் வந்தது. எங்களைத் தவிர மீதி பேரிடம் கேட்டார்களாம். எங்களுக்குத் தெரியாது. … Read more

ஊருக்கே சொந்தமானவன்…

எந்த ஆணுமே தன் மனைவிக்கு ஹீரோ அல்ல என்று ஒரு நண்பர் பார்க்கில் வைத்து சொன்னார். அதை ஒரு நண்பர் ஆமோதித்தார். எனக்கு அது பொருந்தாது என்றேன். அவந்திகா எனக்கு பல நிபந்தனைகளை விதித்திருந்தாலும் (குடிக்காதே, அராத்துவடன் சேராதே, இன்ன பிற) அவளுக்கு நான் ஹீரோ தான் என்று மனதில் நினைத்துக் கொண்டேன். நேற்று மாலை மீண்டும் கொடூரமாக ட்ரில்லிங் போட்டார்கள். ஐயோ, அவந்திகாவை பாதிக்குமே என்று நினைத்தே பதற்றத்தில் எனக்கு நெஞ்சு வலி வந்து விட்டது.  … Read more

நாகூர் நேஷனல் ஹை ஸ்கூல்…

செப்டம்பர் 5-ஆம் தேதி ஆசிரியர் தினமாம்.  அன்றைய தினம் காலை பத்து மணிக்கு நாகூர் நேஷனல் ஹைஸ்கூலில் 9, 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களிடையே உரையாற்றுகிறேன்.  பழைய மாணவர் சந்திப்பு என்றுதான் பழைய மாணவர்கள் சொன்னார்கள்.  50 ஆண்டுக்குப் பிறகு சந்திக்கிறோம். ஆனால் நான் ஒரு எழுத்தாளன் என்பதால் மாணவர்களிடையே பேசுங்கள் என்றார்கள்.  வெறும் சினிமாவை மட்டுமே அறிந்த மாணவர்களிடையே என்ன நான் பேச முடியும்?  என்றாலும் யாரிடமாவது அந்தத் தீப்பொறி பற்றும் இல்லையா?  ஒருவரிடமாவது?  … Read more

மீண்டும் தடம் பற்றி…

கிட்டத்தட்ட நூறு பேரை முகநூலில் என் நட்பு வட்டத்திலிருந்து நீக்கினேன். யாருக்குமே நாம் பேசுவதன் பொருளை அறிந்து கொள்ளவோ, சொல்லின் உள்ளே செல்லவோ பொறுமை இல்லை. அவர்கள் என் எழுத்தைப் படித்துப் பயனில்லை என்று எல்லோரையும் நீக்கி விட்டேன். தடம் பற்றி நான் எழுதியிருந்ததன் பொருளே பலருக்கும் புரியவில்லை. முதியோர் இல்லம் மாதிரி பத்திரிகை நடத்தினா எவன்யா வாங்குவான் என்பது என் கேள்வி. உடனே எதிர்க் கேள்வி என்ன தெரியுமா? நடத்துபவர்களெல்லாம் இளைஞர்கள்; நீர்தான் வயசானவன். அடப்பாவிகளா! … Read more

தஞ்சை ப்ரகாஷ்: ஒரு கடிதமும் ஒரு சின்ன பதிலும்…

தமிழ்நாட்டில் வாழ வெட்கப்படுகிறேன், தமிழில் எழுதுவது காதில்லாதோர் உலகில் சங்கீதம் பாடுவது போல என்றெல்லாம் பலமுறை எழுதியிருக்கிறேன். ஆனால், புலி துரத்தி வரும் போது படுகுழியில் விழுந்து மரக்கிளையில் தொத்திக் கொண்டிருக்கும் ஒருவனின் வாயில் விழும் தேன் துளியைப் போல் இப்படியும் சில கடிதங்கள் வருகின்றன. என் அன்பு நண்பர் தக்ஷிணாமூர்த்தியின் கடிதம் பின்வருவது. தக்ஷிணாமூர்த்தி கார்ப்பெண்ட்டராகப் பணிபுரிகிறார். கடிதம்: சாரு சார்பவுன்ட்லெஸ் அண்ட் பேர் பத்தி ஏற்கனவே சொன்னிங்கன்னுட்டு ஸீரோ டிக்ரீ போய் தேடிட்டுஇருந்தேன் அப்ப … Read more