மிக வெறுக்கப்படும் அரக்கன் – சாரு நிவேதிதா: நேசமித்ரன்

மிக வெறுக்கப்படும் அரக்கன் – சாரு நிவேதிதா இதுவரை எந்த சாதியையும் உயர்த்திப் பிடித்ததாக தெரியவில்லை தமிழ் எழுத்துப் புலத்திற்கு உலக இசையை அறிமுகப் படுத்திய முதல் எழுத்தாளன் 3.காதலுக்கும் காமத்திற்கும் ஆன இடைவெளியை காலம் கடந்து கொண்டே இருக்கிறது.அதன் மானக்கேடான பக்கங்களை ( per version) தன் மொழித்திறத்தால் கடந்த ஒற்றை மனிதன் தான் நம்பிய உத்தியை நவீனத்துவத்தின் கூறுகளை இன்றும் அயல்நிலத்திலிருந்தும் பயின்று பார்க்கும் எழுத்தாளன் சிற்றிதழ் மரபு துயரார்ந்த வாழின் பாகங்களையே பேசிய … Read more

சாரு என்னும் சகாப்தம்: ஆர். அபிலாஷ்

முன்னோடிகளின் பாதையில் நடைபோடுவது சற்று சுலபம். தமிழில் ஏற்கனவே உள்ள செண்டிமெண்டுகள், இங்கு வெற்றி பெற்றுள்ள வடிவங்கள், உருவகங்களை பயன்படுத்தி வாசகரை சுரண்டுவதும் ஓரளவுக்கு எழுத்து கைவந்தவர்களுக்கு சுலபமே. ஆனால் இங்குள்ள கதைகூறல் மரபை முழுக்க உடைத்து விட முயல்வது, உரைநடை-புனைவு எனும் இருமையை அழிப்பது, அதன் வழி சுய அனுபவத்தை சொல்லுகிறவனும் ஒரு கற்பனைப் பாத்திரமே என நிறுவுவது, எதிர்க்கதை எனும் புதிய பள்ளியை இங்கு உருவாக்குவது, ஒரு புது அழகியலுக்கு. களம் அமைப்பது, அதற்கான … Read more

இன்று சாருவுக்குப் பிறந்தநாள்: மனுஷ்ய புத்திரன்

இன்று சாருவுக்கு பிறந்த நாள் என்று காலையில் கண் விழிக்கும்போதே நினைவுக்கு வந்தது. எழுத்தாளர்களுக்கிடையே வரும் சச்சரவுகள், பதிப்பாளர்- எழுத்தாளர்களுக்கிடையே வரும் கசப்புகளை எல்லாம் தாண்டி நட்பின், அன்பின் உயரிய கண்ணியத்தை எப்போதும் என்னை உணரச் செய்தவர் சாரு. அவரை புண்படுத்தக்கூடிய பல வாசகங்களை பலமுறை எழுதியிருக்கிறேன். ஆனால் அவர் ஒருபோதும் அதைப்பொருட்படுத்தியதில்லை. எழுத்திலோ பேச்சிலோ எந்தக் கசப்பையும் என் மேல் வெளிபடுத்தியதில்லை. உயிர்மையைவிட்டு எவ்வளவோ விலகிச் சென்றபிறகும்கூட உயிர்மை அவர் எழுத்து வாழ்க்கைக்கு அளித்த பங்களிப்பை … Read more

முகமூடிகளின் பள்ளத்தாக்கு நாவலுக்குப் பரிசு

எங்களுடைய (ஸீரோ டிகிரி பதிப்பகம்) இரண்டாவது மொழிபெயர்ப்பு நாவல் இது. கடினமான ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நாவல். 2019ல் மொழிபெயர்ப்பு முடிந்துவிட, பின் ஒவ்வொரு வரியாக எடுத்துக்கொண்டு ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு சரியான அர்த்தத்துடன் வந்திருக்கிறதா என்று பார்க்க ஒன்றரை வருடம் . சாரு கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் தன் நேரத்தை இதற்காக ஒதுக்கினார். தாமரைச் செல்வியாகிய Thendral Sivakumarஐப் பற்றி சொல்ல வேண்டுமானால் எனக்கு சட்டென்று தோன்றும் வாக்கியம் ‘She’s publisher’s delight’. சொன்ன நேரத்தில் சொன்னபடி … Read more

சந்தேகம் தீர்ந்தது

என்னுடைய பட்டியலைக் கண்டு யாரும் மிரளவோ வருத்தப்படவோ கூடாது.  ஏனென்றால், அதில் மிக முக்கியமானவர்களின் பெயர்களெல்லாம் விடுபட்டு விடும்.  சீனியின் பெயர் பட்டியலில் இருக்கிறது.  ஆனால் அவரோடு நான் வாரம் ஒருமுறைதான் பேசுவேன்.  கார்த்திக் பிச்சுமணியுடன் வருடம் ஒருமுறைதான் பேசுவேன்.  தினமும் பேசுவது கிருஷ்ணமூர்த்தி என்கிற கிருஷ்ணா.  அவர் பெயரே பட்டியலில் இல்லை.  நேற்று கூட வீடு தேடி வந்தார்.  சொல்லாமல் திடீரென்று வந்தால் என்னைப் பார்க்க முடியாது.  எழுதிக் கொண்டிருக்கும்போது என்னை யாரும் தொடர்பு கொள்ள … Read more

ஒரு சந்தேகம்

என்னோடு தொடர்பில் இருக்கும் நண்பர்கள் என முத்துக்குமார், கார்த்திக், சீனி, வளன், சாதனா, ஸ்ரீராம், காயத்ரி, ராஜா வெங்கடேஷ், வினித், கார்த்திக் பிச்சுமணி, ராஜேஷ், சிவராமன் (சவூதி), செல்வகுமார் என்று பலர் உண்டு.  இவர்களில் ஒன்றிரண்டு பேரைத் தவிர வேறு யாரும் நான்தான் ஔரங்கசீப்… நாவலைத் தொடர்ந்து வாசிப்பதாகத் தெரியவில்லை.  ஒவ்வொருவராக போன் செய்து கேட்டேன்.  நான் கேட்ட வரை யாருமே இதுவரை முழுசாகப் படிக்கவில்லை.  12, 35, 38 என்பதாகத்தான் அத்தியாயம் எண் சொன்னார்கள்.  ராஜா … Read more