நெருங்குவதற்குத் தயக்கம்…

சற்று நேரத்துக்கு முன்னால் ஒரு நண்பர் பேசினார்.  ஒரு வாசகர் என்னிடம் கொடுக்கச் சொல்லி ஒரு லட்சம் ரூபாய் அந்த நண்பரிடம் கொடுத்திருக்கிறார்.  பணம் கொடுத்தவர் ஒரு தொழிலதிபர்.  ஏன், அவருக்கு என் மின்னஞ்சல் முகவரி, வங்கிக் கணக்கு போன்ற விவரங்கள் தெரியாதா என்று கேட்டேன்.  தெரியும், ஆனாலும் உங்களை நெருங்குவதற்கு அவருக்குத் தயக்கமாக இருந்திருக்கிறது என்றார் நண்பர்.  இப்படியும் பல வாசகர்கள் இருக்கலாம்.  அந்தத் தொழிலதிபர் மேலும் ஒரு விஷயத்தைச் சொல்லி வருத்தப்பட்டாராம்.  பணம் கொடுக்காத … Read more

ஹம்மரும் ஜகுவாரும்…

நான்தான் ஔரங்ஸேப்… நாவலின் சிறப்புப் பதிப்பு வெளியீட்டுத் திட்டத்தில் பத்தாயிரம் ரூபாய் பிரிவில் சுமார் இருபது பேரும், ஐம்பதாயிரம் பிரிவில் நான்கு பேரும், ஐந்து லட்சம் பிரிவில் ஒருவரும் பணம் அனுப்பியிருக்கிறார்கள். ஐம்பதாயிரம் அனுப்பிய ஒரு நண்பர் தன் பெயரைக் குறிப்பிடவில்லை.  பெயரைக் குறிப்பிட்டால் நல்லது.  இவரைத் தவிர மற்ற அத்தனை பேரும் நீண்ட காலமாக என்னோடு தொடர்பில் இருக்கும் நண்பர்கள்.  புதிதாக ஒருவர் கூட பணம் அனுப்பி இந்த சிறப்புப் பதிப்புத் திட்டத்தில் இணையவில்லை என்பது … Read more

தமிழுக்குக் கிடைத்த கொடை

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பதுகளிலிருந்து ஒரு அரை நூற்றாண்டுக் காலம் ஐரோப்பாவில் நிலவிய அரசியல், சமூகச் சூழல் எக்ஸிஸ்டென்ஷியலிஸம் என்ற தத்துவக் கோட்பாட்டை உருவாக்குவதற்குக் காரணமாக அமைந்தது என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.  தத்துவம் மட்டும் அல்லாது எக்ஸிஸ்டென்ஷியலிஸம் தன் பாதிப்பை செலுத்திய துறைகள் இலக்கியம், ஓவியம் மற்றும் சினிமா.  அதற்குப் பிறகு வந்ததுதான் ஸ்ட்ரக்சுரலிஸம் என்ற அமைப்பியல்வாதம் மற்றும் பின்னமைப்பியல்வாதம்.  இதன் கலாச்சார வெளிப்பாடுதான் பின்நவீனத்துவம்.  பின்நவீனத்துவம் என்பது எக்ஸிஸ்டென்ஷியலிஸத்தைப் போல் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தோடு முடிந்து … Read more

என் வாழ்வில் நிகழ்ந்த அற்புதம்

நிகழ மறுத்த அற்புதம் என்று நான் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன்.  கமல்ஹாஸன் பற்றிய கட்டுரை.  அந்தக் கட்டுரை வெளிவந்தவுடன் அந்த்த் தலைப்பு தர்மு சிவராமுவினுடையது என்று தெரிய வந்த்து.  அதனால் நான் ஒன்றும் கவலைப்படவில்லை.  தர்மு சிவராமு ஒரு லெஜண்ட்.  லெஜண்டுகளின் வார்த்தைகளை நாம் பயன்படுத்திக் கொள்ள தடையேதும் இல்லை. அப்படியேதான் மாயமான் வேட்டை என்ற தலைப்பையும் பயன்படுத்திக் கொண்டேன்.  அத்தலைப்பு இந்திரா பார்த்தசாரதியின் குறுநாவல்.  என் வாழ்வில் சீலேயின் முக்கியத்துவம் பற்றி ஆயிரம் பக்கம் எழுதியாயிற்று.  … Read more

இடமும் இருப்பும்

சிறப்புப் பதிப்புக்குப் பணம் அனுப்ப இன்னும் ஒரு வாரம் இருக்கிறது.  அதற்குப் பின் புத்தகம் அச்சுக்குப் போய் விடும்.  அம்பதாயிரம், லட்சம், மூணு லட்சம் எல்லாம் முடியாவிட்டாலும் பத்தாயிரம் ரூபாய் அனுப்பி சிறப்புப் பதிப்புக்குப் பதிவு செய்து கொள்ளுங்கள்.  ராஸ லீலா சிறப்புப் பதிப்புக்கு எழுபதுக்கும் மேற்பட்டவர்கள் பணம் அனுப்பியிருந்தார்கள்.  ஆனால் நான்தான் ஔரங்ஸேப்… நாவலுக்கு இதுவரை பதினேழு பேர்தான் பணம் அனுப்பியிருக்கிறார்கள்.  அதிலும் பதினைந்து பேர் மாதாமாதம் எனக்குப் பணமாகவோ பூனை உணவாகவோ மற்ற விதமாகவோ … Read more

மீண்டும் தனிமையில்…

வரும் புதன்கிழமை அன்று அவந்திகா திரும்பவும் மும்பை செல்கிறாள்.  மீண்டும் வீட்டில் தனியாக வாழும் அனுபவம் கிடைக்க இருக்கிறது.  இந்த முறை மூன்று வாரம் மட்டுமே.  வீட்டு வேலைக்குப் பணிப்பெண் இருப்பதால் பிரச்சினை இல்லை.  ஆனால் சமையல் செய்யும் பெண்ணை அவந்திகா மும்பையிலிருந்து திரும்பியதுமே நிறுத்தி விட்டாள்.  நன்றாக சமைக்கத் தெரிந்த பெண்தான் என்றாலும், கை நீளம் என்று தெரிந்தது.   குசினியில் பல பொருட்களைக் காணோம்.  ஆக, மூன்று வார காலத்துக்கு நான் வெளியில்தான் சாப்பிட வேண்டும்.  … Read more