பெருமிதம் கொள்கிறேன்

சொர்க்கம், நரகம் மற்றும் ஒரு கால்ஃப் மைதானம் தொகுதியை செப்பனிட்டுக்கொண்டிருக்கிறேன். சர்வதேச அளவில் எனக்கு நெருக்கமான கவிகள் ஒக்தாவியோ பாஸ், நிகானோர் பார்ரா, பாப்லோ நெரூதா, ஜாக் ப்ரேவர், செஸ்லா மிலாஸ் (Czeslaw Milosz), விஸ்லாவா ஸிம்போர்ஸ்கா (Wislawa Szymborska), வ்ளதிமீர் நொபக்கோவ், சார்ல்ஸ் ப்யூகாவ்ஸ்கி, ஜோஸஃப் ப்ராட்ஸ்கி (Joseph Broadsky). இந்தப் பட்டியல் மிகவும் நீண்டது. இவர்களில் நிகானோர் பார்ராவும் நெரூதாவும் ஒரே தேசத்தவர்கள். அதை விட ஆச்சரியம் ஸிஸ்லோ மிலாஸும் ஸிம்போர்ஸ்காவும் ஒரே தேசத்தவர்கள். … Read more

நீர் மேல் நடக்கும் தேவதை: செல்வா

எங்களால் செல்வா என்று அழைக்கப்படும் செல்வகுமார் கணேசன் சுமார் இருநூறு கவிதைகளை எழுதியிருப்பார். ஆட்டோநேரடிவ் பதிப்பகத்தின் நிர்வாகி. வாசகர் வட்டத்தின் முக்கியமான நண்பர். அன்பின் மறு உருவம். அவருக்குக் கோபம் வந்து யாருமே பார்த்திருக்க மாட்டார்கள். குரல் உயர்த்திக் கூட பேசியதில்லை. இவர் இந்த உலகில் எப்படி ஜீவிக்கிறார் என்றே இவரைக் காணும் போதெல்லாம் எனக்கு ஆச்சரியமாக இருக்கும். இத்தனைக்கும் ஒரு நிறுவனத்தின் தலைவர் வேறு. அவர் எழுதிய கவிதை ஒன்றை இன்று கண்டேன். இதைப் படித்ததிலிருந்து … Read more

ஓர் அடிமையின் பாடல்

நான் யார்? நான் நல்லவனா கெட்டவனாரெண்டும் கலந்தவனாதெரியாதுஆனாலொன்றுநான் அடிமைஎப்படியென்று சொல்கிறேன் காதலிக்காக எதையும் செய்பவன் நீ என் காதலிஎன்னை விட்டுஅல்லது விடாமல்என் நண்பனையும் காதலித்தால்நானே உங்களுக்கு அறை ஏற்பாடு செய்வேன்பொஸஸிவ்னெஸ்?துளியுமில்லை பேரழகி நீ பார்க்க மயிலாக இருந்தாலும்மந்தியாக இருந்தாலும்பேரழகி என்பேன்‘பொய் சொல்கிறாய்’என்று நீ சொன்னால்என் காதை வெட்டிஉன் கையில் கொடுப்பேன் பிச்சை எடுத்து கொடுத்த கதை என் மகனார் தன் மனையாளைப் படிக்க வைக்கநாலு லகரம் கேட்டார்நான் பிச்சையெடுத்த காசுகொடுத்தேன்கல்லில் நார் உரிப்பதுபோல்ரெண்டு லகரம் உரித்தேன்பிறகு அலுத்துப் … Read more