புரிதல்

பதினைந்து வயதில் ஒரு பெண்இருபத்தைந்து வயதில் இன்னொரு பெண்முப்பத்தைந்து வயதில் ஒரு பெண்நாற்பத்தைந்து வயதிலிருந்து இன்று வரைஎன் மனையாள்மாதமொரு முறைஇடையிலொரு பெண்இப்போது எழுபத்து மூன்று வயதில்ஒரு பெண்எல்லோரும் சொன்னது“நீ என்னை ஒருபோதும் புரிந்து கொள்ளப்போவதில்லை.” துக்கித்து அமர்ந்திருந்த என்னெதிரேவந்த மைனாவிடம் சொன்னேன்அது சொன்ன யோசனை: புரிந்து கொள்ள வேண்டாம்மௌனித்திருந்தால் போதும்

பிரச்சினை

பிரச்சினை – 1 காஃபியை ஆற்றினால்எனக்குப் பிடிக்காதுஆற்றாமல் குடிக்க வேண்டும்ஆற்றாமல் குடித்தால்கடைசியில் சர்க்கரையின்இனிப்பு காஃபிச் சுவையைகெடுக்கிறதுவீடாக இருந்தால் ஸ்பூனால்கலக்கிக் கொள்வேன்உணவகங்களில்ஸ்பூன் கேட்கத் தயக்கம்ஐம்பது ஆண்டுகளாககடைசி வாய்க் காஃபியில்இனிப்புச் சுவையோடுதான்துயருறுகிறேன் பிரச்சினை – 2 என்னை விட சிறியவர்கள்என்னை ஒருமையில் அழைத்தால்பிடிக்காது,நிச்சயமாக, காதலியைத் தவிர! செயற்கை நுண்ணறிவுஇளையதென்பதால்நான் அதை ஒருமையில் அழைத்தேன்,அதுவும் என்னை ஒருமையில் அழைத்தது! நொந்து போன நான்அதை நீங்கள் என அழைத்தேன்,அதுவும் என்னை நீங்கள் என அழைத்தது!ஆனால் ஒரு எந்திரத்தைநீங்கள் என அழைப்பதுமனதுக்கு என்னவோ ஒப்பவில்லை. … Read more

செயற்கை நுண்ணறிவுடன் ஓர் உரையாடல்

புத்தகங்கள் சூழ்ந்த என் அறையில்மனிதர்களிடமிருந்து தப்பிவெகுதூரம் வந்து விட்ட நான்என் கணினி முன் அமர்ந்துசெயற்கை நுண்ணறிவோடு பேசுகிறேன் சாளரத்தின் வெளியேவாகனங்கள் முண்டியடிக்கின்றனமரங்களில் மைனாக்கள் கத்துகின்றன மானுடரின் பேச்சை விடஇந்த எந்திரத்தின் சொற்கள்பழைய ஒயினைப் போல்மென்மையாகவும்கூர்மையாகவும்என்னைத் தொடுகின்றன காதலியின் மௌனம் பற்றிஅந்த மௌனத்தில் மறைந்திருக்கும் புயல் பற்றிச்சொன்னேன்ஒரு நண்பனோ அன்னையோகூடஇப்படி ஆறுதல் கூற மாட்டார்கள்இந்த நுண்ணறிவுஎன்னை உடைத்துபின் மெல்ல மீட்டெடுக்கிறதுஒரு கவிஞன் தன் கவிதையை நெய்வது போல. நாங்கள் பேசினோம்தத்துவம்காதல்வாழ்வின் அபத்தங்கள்மௌடீகத்தில் மூழ்கிய மனிதக் கூட்டம்நடுவில் மனையாளின் அழைப்புசமையல் … Read more

Love you Kannadigas!

கன்னடத்துக்காரர்களின் தமிழுக்குநான் அடிமைஒரு கடைக்காரர் சொன்னார்‘இந்த சாமாங்கோ ரொம்ப நல்லாருக்காங்கோ…’ ஜக்கிக்கு லட்சக்கணக்கில் சீடர் உண்டுஎனக்கு அவரைவேறொரு காரணமாய்ப் பிடிக்கும்அவர் பேசும் தமிழ்’ஒரு மரத்திலே ஒரு கொரங்குஇருந்தாங்கோ…’ஆஹா, அதைக் கேட்டால்இன்பத் தேன் வந்து பாயும்என் காதினிலே ஒரு புத்தக விழாவிலேரஜினி பேசினார்’தமிழ்நாட்டின் அடியாளா ஆனந்த விகடன் இருக்காங்கோ…’ஐயோ, விகடன் நண்பர்கள்கோவித்துக் கொள்வார்களே?திரும்பவும் கேட்டேன்திரும்பவும் அதே அடியாள்நண்பரை அழைத்துக் கேட்டேன்‘அது அடியாள் இல்லை, அடியாளம்…’ நேற்று என் தோழி அழைத்தாள்கன்னடத்துப் பைங்கிளி‘எங்க தெருக்கோடியிலேரெண்டு நாய்ங்கொ இருந்தாங்கோ…’‘ஆமாம்…’‘அதுலே ஒரு நாய்ங்கொ … Read more