நோயும் மருந்தும்

அடிக்கடி கேட்கப்படுகிறதுஏன் கவிதை எழுதுகிறீர்கள்நெரூதாவிடமும் கேட்கப்பட்டதுநானா கவிதையைத் தேடிப் போனேன்கவிதை என்னைத் தேடி வந்ததுஎன்றார் அவர் ஒரு பத்திரிகைக்குக்கவிதை அனுப்பினேன்எடிட்டர் கேட்டார்ஏன் கவிதை எழுதுகிறீர்கள் எனக்குத் தெரியவில்லைஎன்றேன் வெகுளியாய் மாரத்தன் ஓட்டத்தைப் போல்இன்று ஒரு ஆறு கவிதை எழுதினேன் படித்து விட்டுஏனிந்த வெறிஏனிந்தப் பித்தநிலைஎன்ன செய்தால் அடங்கும்எனக் கேட்டாள்கவிதைக்கு உரியவள் சிசு வெளியேற ஒன்பது மாதம்வெளியே வந்தால் உயிரின் மலர்ச்சிஉள்ளே இருந்தால் மரணத்தின்காரிருள்கவிதைக்கு எத்தனைக் காலம்என்பதை யாரறிவார்வெளியே வந்தால் உயிர்உள்ளே இருந்தால் மரணம்என்றேன் இன்னொரு பதிலும் உண்டுசொர்க்கம் … Read more

மந்திர வனத்தில் தொலைந்து போனவன்

அடியேய்நீயே சொல்ஏன் என்னை இப்படிப் பித்தனாக்கினாய்?உன் இதயத்தைத் தொட்டு உறுதியாகச் சொல்நீதானே இந்தப் பைத்தியத்தின் மூலம்? மூன்று ஆண்டுகள் நானுண்டுஎன் எழுத்து உண்டு என்றுதானே இருந்தேன்?உன்னைத் தொந்தரவு செய்தேனா?உன் மௌனம் பற்றி வாதாடினேனா?உன் ப்ளூ டிக்கை மறைத்ததற்கு நொந்தேனா?ஏன் என்னை சந்திக்கவில்லையெனப் புகார் செய்தேனா? இப்போது பார்நீ ஒரு மந்திரக் கண்ணாடிஎன் ஆன்மாவில் புகுந்துஎன்னை உன் நிழலில் கட்டிப் போட்டாய்அந்த மலைப்பிரதேசத்தில்என்னை விட்டுப் பிரிய மனமில்லாமல்நீ விட்ட கண்ணீர்தான்என்னை இப்படிப் பித்தனாக்கியதுஅந்த உன் கண்ணீர்தீயாய் மாறிஎன் இதயத்தையும்நரம்புகளையும்எரித்துக்கொண்டிருக்கிறது … Read more

நம்பிக்கை

நம்மால் செய்யக்கூடியதெல்லாம் நம்பிக்கை கொள்வது மட்டுமே நாம் நேசிப்பவர்கள் நம்மையும் நேசிக்க முடியும் என்றும் நாம் யாருடன் நேரம் செலவிட விரும்புகிறோமோ அவர்கள் நம்முடன் நேரம் செலவிட முடியும் என்றும்… Salena Godden

ஆத்மவதம்

மரப்பாச்சி பொம்மைக்குசீலை கட்டிதலை வாரிசடை பின்னிபால் அன்னம் ஊட்டிய சிறுமியிடம்ஒருத்தி சொன்னாள்:”ஏய் மூடத்திஅது வெறும் மரக்கட்டைஅதற்கு உயிரில்லை.”அன்றிலிருந்துமனநலம் குன்றினாள் சிறுமி ஒருவன் தன்னைஞானியென சொல்லி வந்தான்ஒருத்தி அவனிடம்“அனுபவத்தில் சொல்கிறேன்நீ ஞானியல்லபைத்தியம்” என்றாள்அன்றிலிருந்துபைத்தியமானான் ஞானி

பனிக்காட்டில் தனித்திருப்பவன்

1 மைனாவின் பாடல் கேட்பதைசெவிகள் நிறுத்தி விட்டனதேன்சிட்டின் இசையும் தொலைந்து போயிற்றுஇரவுநட்சத்திரங்களின் ஒளியை மறைக்கிறதுநிலவு ஒரு மங்கிய கண்ணாடிசொற்கள் என்னை விட்டு ஓடி விட்டனவாசிப்பு கானல் நீர்சலன சித்திரங்கள் அர்த்தமற்ற நிழல்கள்சிநேகத்துடன் பழகி வந்தவிருட்சங்களும் கைவிட்டனநாய் பூனை என் குரல் மறந்தனநித்திரை தூரத்து நினைவுஊணும் சுவை குன்றியதுகனவுகளால் வேட்டையாடப்பட்டுகவிதையில் தஞ்சமடைகிறேன் 2 மனிதர் யாவரும் ஒருவரையொருவர்காயப்படுத்திக் கொள்கிறார்கள்ஆனாலும்ஒருவர் மீதொருவர்அன்பு செலுத்துவதாகவே நம்புகிறார்கள்அன்பின் மொழியை மட்டுமேகவிதையாக்குவதாகநான் நம்புவதைப் போல