பெட்டியோவின் கடைசி அத்தியாயம்

பெட்டியோ நாவலை நான் எப்படி எழுதினேன் என்று எனக்கே தெரியவில்லை. இலங்கையிலிருந்து திரும்பியதும் உடனே எழுதினேன். ஒரு மாதத்தில் முடித்தேன் என நினைக்கிறேன். ஸ்ரீராம் சரியாகச் சொல்வார். அதில் உள்ள பல சம்பவங்கள் பெட்டியோ நாவலுக்கு முன்னதாக நடக்கவில்லை. ஆனால் அதே சம்பவங்கள் இலங்கைக்கு நான் இரண்டாவது முறை சென்ற போது நடந்தேறின. எனக்கு இன்னமும் நம்ப முடியாத ஆச்சரியம் அது. எப்படி ஒருவன் தன் வாழ்க்கை வரலாற்றை, அது நிகழ்வதற்கு முன்கூட்டியே எழுத முடியும்? அது … Read more

உயிர்த்தெழுதல்

அவள் சொன்னாள்’இரண்டு நாட்கள் தொடர்பில்லையென்றாலும் பதறாதேமூன்றாம் நாள் பேசுவேன்’நம்பிக்கையை ஒரு மெல்லிய காகிதத்தில்மடித்து பையின் மூலையில் வைத்தேன் இன்று மூன்றாம் நாள்காலை ஏழு மணிஅழைத்தேன்ஒலி ஒரு பறவை போல்காற்றில் பறந்து மறைகிறது எட்டு மணிமீண்டும் மௌனம்மௌனம் ஒரு பழைய நண்பன் போல்தோளில் கை போட்டு’இது உனக்குப் பழகி விட்டதல்லவா?’என்று கேட்கிறது பெண்கள் மீது ஒரு பயம்ஆண்களின் அன்பு அவர்களை மூச்சு முட்டச்செய்யுமாம்பலர் சொல்லிக் கேள்விநான்தொந்தரவு செய்ய விரும்பாதவன்ஒன்பது மணிக்கு அழைக்கவில்லைகாலத்தைப் பிடித்து வைக்க முடியுமா? யாரோ கேட்டார்கள்என்ன … Read more

ஒற்றையெழுத்து பதில்

நேற்றுதான் எழுதியிருந்தேன், ஒற்றையெழுத்து பதில் கொடுத்து மற்றவர்களின் மண்டை காய வைப்பது பற்றி. நான் எழுதி ஈரம் காய்வதற்குள் அதே விஷயம் நடந்தது. ஒருவருக்கு ஒரு முக்கியமான விஷயம் பற்றி நாலு வாக்கியங்களில் அவர் பெயரையும் விளித்து விளக்கமாக ஒரு கடிதம் எழுதினேன். ஓகே என்று பதில் மின்னஞ்சல் வந்தது. செருப்பால் அடித்தது போல் இருந்தது. ஓகே சாரு என்று எழுதுவதற்கு உங்களுக்கு என்ன குடியா முழுகி விடும்? இப்படிப்பட்டவர்களோடுதான் நான் பேச வேண்டியிருக்கிறது. இதற்குக் கோபித்துக் … Read more