ஆதியிலே வார்த்தை இருந்தது

நான்வார்த்தைகளின் கடலில் வாழ்கிறேன்நட்சத்திரங்களின் தூசியைப் போல்அவை என்னைச் சூழ்கின்றனஎன் முன்னோரின் எலும்புகளிலிருந்துகாவியங்கள் செய்கிறேன் சில வார்த்தைகள் செத்து மண்ணோடுமறையசில தேய்ந்து கற்களாய் உருள்கின்றனசிலவோ உயிர்த்துப் பொங்கும் வார்த்தைகளாய்என் உயிர் எரிக்கின்றன வார்த்தைகளால் மனிதர்கள் மகிழ்கிறார்கள்வார்த்தைகளால் மனிதர்கள் காதலிக்கிறார்கள்வார்த்தைகளால் மனிதர்கள் புணர்கிறார்கள்தீர்க்கதரிசிகள் வார்த்தைகளை விதைத்துநம்பிக்கை விருட்சங்களை வளர்க்கின்றனர்ஆனால் அவை மோதிஆயிரமாயிரம் ஆண்டுகள்பூமியிலே குருதிப்புனல் ஓடுகிறது என் காதலிஒரு ரயில் நிலையத்தின் மஞ்சள் வெளிச்சத்தில்பதினெட்டு மாதங்கள் பிரிவின் கல் மேல் காத்திருஎன்றாள்அந்த ஆறு வார்த்தைகள்என்னை மரணத்தின் கரையில் தள்ளியதுஅவளுடைய அடுத்த … Read more

துக்கம் பரவசம்

Adagio for Strings கேட்டுஉங்கள் கதைநாயகிமீளாத் துயரில் தோய்ந்தாளெனஎழுதியிருக்கிறீர்கள்.எனக்கோ அதைக் கேட்டால்ஆன்மாவில் பரவசம்அருவியெனப் பொங்கி வழிகிறதுஎன்றாள் என் தோழி.நான் சொன்னேன்:ஆனந்தமும், துக்கமும், பரவசமும்—ஒன்றே, வேறு இல்லை.பனிமலைகளின் பாதாள மௌனத்தில்,ஒரு நொடியின் நிழல்வாழ்க்கையின் நித்தியப் பொறியைத் தீண்டுகிறது.

மேலும்…

என் நண்பனின் தோழிதென்னாட்டுத் திரையுலகின் காமதேவதைஇளம்வயதில் இறந்து போனாள்தற்கொலையென்றார்கள்கொலையென்றார்கள்தற்கொலையென்றே உறுதியாய்நம்பினேன்ஒரு நட்சத்திரத்தின் தற்கொலையைப் போலஒரு நாய் அல்லது ஓநாயின் தற்கொலையைப் போலஒரு விருட்சத்தின் தற்கொலையைப் போலஒரு நதியின் தற்கொலையைப் போலஒரு நாகரீகத்தின் தற்கொலையைப் போலஒரு வனத்தின் தற்கொலையைப் போலஒரு இனத்தின் தற்கொலையைப் போலஒரு மொழியின் தற்கொலையைப் போலஒரு துறவியின் தற்கொலையைப் போலநிகழ்ந்தது அந்த தேவதையின் தற்கொலை அது தற்கொலையென்று நான்அறிந்தது எப்படியென்றால்நானும் தற்கொலை செய்து கொண்டபோதுஒரு நாளில் இரண்டு மூன்று கவிதைகள் எழுதுகிறேன்ஒரு நாளில் இரண்டு மூன்று … Read more