ஆதியிலே வார்த்தை இருந்தது
நான்வார்த்தைகளின் கடலில் வாழ்கிறேன்நட்சத்திரங்களின் தூசியைப் போல்அவை என்னைச் சூழ்கின்றனஎன் முன்னோரின் எலும்புகளிலிருந்துகாவியங்கள் செய்கிறேன் சில வார்த்தைகள் செத்து மண்ணோடுமறையசில தேய்ந்து கற்களாய் உருள்கின்றனசிலவோ உயிர்த்துப் பொங்கும் வார்த்தைகளாய்என் உயிர் எரிக்கின்றன வார்த்தைகளால் மனிதர்கள் மகிழ்கிறார்கள்வார்த்தைகளால் மனிதர்கள் காதலிக்கிறார்கள்வார்த்தைகளால் மனிதர்கள் புணர்கிறார்கள்தீர்க்கதரிசிகள் வார்த்தைகளை விதைத்துநம்பிக்கை விருட்சங்களை வளர்க்கின்றனர்ஆனால் அவை மோதிஆயிரமாயிரம் ஆண்டுகள்பூமியிலே குருதிப்புனல் ஓடுகிறது என் காதலிஒரு ரயில் நிலையத்தின் மஞ்சள் வெளிச்சத்தில்பதினெட்டு மாதங்கள் பிரிவின் கல் மேல் காத்திருஎன்றாள்அந்த ஆறு வார்த்தைகள்என்னை மரணத்தின் கரையில் தள்ளியதுஅவளுடைய அடுத்த … Read more