மனையாள் சொன்னாள்:”தவறாக நினைக்காதேஆயுள் முழுதும் அசைவம் தின்றாய்இப்போது உன் உடல் அதை ஏற்கவில்லை” சாகும் வரை சாப்பிடுவேன் என்றேன். மோகினிக்குட்டி சொன்னாள்:”தவறாக நினைக்காதே,காமத்தில் வாழ்ந்தாய்மூழ்கினாய்இப்போது உன் உடல் அதைத் தாங்கவில்லை,கண்கூடாய்க் கண்டேன்போதும்.” “இந்தக் கதை கேள்:முப்பத்தைந்தில் புகாவ்ஸ்கிரத்த வாந்தி எடுத்தான்,ஆசனத்தில் குருதி கொட்டியது.மருத்துவர் எச்சரித்தார்:‘இன்னொரு கோப்பை மது அருந்தினால்,அது உன் இறுதிக் கோப்பை.’ஆனால், அவன்தினம் மூன்று முதல் ஏழு போத்தல்வைன் குடித்தபடி,முப்பத்தெட்டு ஆண்டுகள் வாழ்ந்தான்.அதனால்நான் சாகும் வரை காமம் தின்பேன்.”