சாரு நிவேதிதா – வாழ்ந்து வரும் ஷோர்பா: இராயகிரி சங்கர்
நம் நீண்ட ஞானமரபில் சித்தர்களின் பங்களிப்பை ஒருபோதும் மறுத்துவிட முடியாது. தொலைந்து போன ஞானச் செல்வம் அம்மரபு. புதுமைப் பித்தனுக்கு வெள்ளாள பிறப்பின் மூலம் சைவப் பின்புலம் இயல்பாக சாத்தியப்பட்டாலும் சித்தர்களைப் பற்றிய புனைவுகளையும் அதிகம் எழுதியிருக்கிறார். பாரதியை சித்தர்களில் ஒருவர் என்றே மதிப்பிடலாம். ந.பிச்சமூர்த்தி, மெளனி, பிரமிள், மு.தளையசிங்கம் என்று அம்மரபு நம்மிடையே அறுபடாமல் இருந்து கொண்டுதான் உள்ளது. சமகாலத்தில் போகன்சங்கர் அத்தகைய புனைவு வெளியை படைப்பாக்கும் வாழ்வியல் அனுபவங்கள் உள்ளவர். ஜெ.நிறைய எழுதி இருக்கிறார். … Read more