சாபத்தை வரமாக மாற்றுவதற்கு ஓர் எளிய வழி

சார்,  உங்கள் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. எனக்கு எந்தவித இசை அறிவும் கிடையாது. பின்வரும் இரு பாடல்களும் எனக்கு ஒரே மாதிரி தெரிகின்றன. நேரமிருந்தால் கேட்டுப் பாருங்கள். உங்களுக்கு அப்படித் தோன்றவில்லை என்றால் உங்கள் நேரத்தை எடுத்துக் கொண்டதற்காக மன்னியுங்கள். சாபம் ஏதும் தரவேண்டாம். ஏற்கனவே அப்படி ஒரு வாழ்வைத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நன்றி! லெனி டியர் லெனி, நான் ஏன் சாபம் தரப் போகிறேன்?  ஒன்று தெரியுமா உங்களுக்கு?  நான் யாருக்குமே இதுவரை சாபமே தந்ததில்லை.  … Read more

ஒரு சுவாரசியமான வாழ்த்துச் செய்தி

சாருவுக்கு வாழ்த்துகள் நவீன தமிழ் இலக்கியத்தை ஒரு சிறு கூட்டத்திலிருந்து பெரும் கூட்டத்துக்குக் கடத்தியதில் என் தலைமுறையில் நால்வருக்குப் பெரும் பங்கு உண்டு. ஜெயமோகன், சாரு நிவேதிதா, எஸ்.ராமகிருஷ்ணன், மனுஷ்யபுத்திரன். இப்படிச் சொல்லும்போது ஏனையோர் பங்களிப்பை நான் மறுதலிக்கவில்லை. அதேபோல, தமிழ் இலக்கியத்தில் என்னுடைய ஆதர்ஷங்களும் இவர்கள் இல்லை. ஆனால், இலக்கியம் தெரியாதவர்களிடமும் இலக்கியம் குறித்த மதிப்பைக் கூட்டியவர்கள் இவர்கள். அதனாலேயே, ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் பணியாற்றுகையில் ஒவ்வொரு புத்தகக்காட்சி சிறப்பிதழ்களின் நிறைவு நாளிலும் இவர்கள் … Read more

நான்தான் ஔரங்ஸேப்… முன்பதிவுத் திட்டம் (இன்னும் இரண்டு தினங்கள்)

நான்தான் ஔரங்ஸேப் இன்னும் இரண்டு தினங்களில் கைக்கு வந்து விடும்.  முன்வெளியீட்டுத் திட்டத்தில் சலுகை விலையில் நாவலை வாங்க விரும்புபவர்கள் இந்த இரண்டு தின்ங்களில் பணம் அனுப்பினால் அதனால் இரண்டு அனுகூலங்கள்.  சலுகை விலையில் கிடைக்கும்.  இரண்டு, நாவலில் என் கையெழுத்தும் இருக்கும்.  அதற்கான விவரங்கள்:   https://tinyurl.com/naanthaanaurangazeb