பூச்சி 51

சென்ற கட்டுரையின் தொடர்ச்சியாக இன்னும் ஒருசில விஷயங்கள்.  வெகுளியாக இருந்து கொண்டு நாம் செய்யும் சில காரியங்கள் உண்மையில் அடுத்தவரை மிகவும் பாதிக்கக் கூடியதாக, அடுத்தவரின் வெளியில் அத்துமீறுவதாக இருந்து விடுகிறது.  சுருக்கமாகச் சொன்னால், rudeness.  சீனியுடன் பேசிக் கொண்டிருந்த போதுதான் இந்த வெளிச்சம் எனக்குக் கிடைத்தது.  ஒரு இளம் எழுத்தாளர் சீனியைத் தற்செயலாக சந்திக்க நேர்ந்த போது அவர் எழுதிய புத்தகம் ஒன்றைப் படிக்கச் சொல்லி சொல்லியிருக்கிறார்.  இதில் என்ன தப்பு என்றுதான் உங்களுக்கும் எனக்கும் … Read more

பூச்சி 50

அப்படி இப்படி பூச்சி ஐம்பதை நெருங்கி விட்டோம்.  இப்போது ஒரு இலக்கியப் பிஸாது.  நாகூர் பாஷையில் பிஸாது என்றால் கிசுகிசு.  ஒரு அன்பர்.  அவர் எழுதிய சிறுகதைத் தொகுதியைக் கொடுத்தார்.  ஓ, அதற்கு முன் ஒரு விஷயம்.  ”சாரு கிசுகிசு எழுத லாயக்கில்லை; இன்னாரின் வீட்டு முகவரியைத் தவிர மற்ற எல்லா விபரங்களையும் கொடுத்து விடுகிறார்” என்பது மாதிரி ஜெயமோகன் முன்பு எழுதியிருந்தார்.  அதையே சவாலாக எடுத்துக் கொண்டு இதை எழுதுகிறேன்.  இப்போது சம்பந்தப்பட்ட ஆசாமிகளாலேயே இதைக் … Read more

பூச்சி – 49

இந்த அய்யங்கார்களைப் பற்றின என் பதிவுகளுக்குக் காரணமே சீனியின் தவப்புதல்வன் ஆழிமழைக் கண்ணன்தான்.  ஆழியின் பேச்சுக்களை வைத்து சீனி புத்தகமே போட்டு விட்டார்.  சகலகலா வல்லவன்.  நன்றாகப் பாடுகிறான்.  எனக்கு இப்படி “என் பையன்/பெண் நல்லா பாடுவான்/ள்” என்று சொல்லும் ஆட்களைக் கண்டாலே பிடிக்காது.  ஏனென்றால், உடனே இளையராஜா பாட்டை எடுத்து விடுவார்கள் பிள்ளைகள்.  அது ஏதாவது முதலிரவு சல்லாபப் பாடலாக இருக்கும்.  இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது ஜனனி மனனி என்று.  ஆனால் ஆழி பாடினான் பாருங்கள் … Read more

பூச்சி – 48

சென்ற ஆண்டு நான் வெப்சீரீஸிலேயே மூழ்கிக் கிடந்த போது மெஸையா என்ற ஒரு தொடரைப் பார்த்தேன்.  அது பற்றி யாரும் குறிப்பிடாதது எனக்கு ஒரு ஆச்சரியம்.  அந்தத் தொடரைப் பார்த்தவர்களால் அதை மறக்கவே இயலாது.  அதன் கதை அப்படி.  இயேசு கிறிஸ்து இப்போது மீண்டும் தோன்றினால் எப்படி இருக்கும் என்பதே கதை.  என்ன ஒரு கற்பனை! அதற்காகவே இந்தத் தொடரைப் பார்க்கலாம்.   அரபியில் மெஸ்ஸி மெஸ்ஸி என்றே அழைக்கிறார்கள்.  மெஸ்ஸி என்பது மெஸையா போல.  யேசுவின் அற்புதங்களையெல்லாம் … Read more

பூச்சி 47

புத்திசாலி அய்யங்கார்களைப் பற்றிச் சொல்லும் போதே வேறொருவர் பற்றியும் குறிப்பிட்டேன்.  வேண்டாம்.  கனிந்த பிறகு யாரையும் மக்கு என்று சொல்ல மனசு வர மாட்டேன் என்கிறது.  இன்று காயத்ரியும் நீங்கள் கனிந்து விட்டீர்கள் என்றாள்.  அப்படியானால் அது உண்மைதான் போல.  இனிமேலும் ஸர்ப்பகந்தா மூலிகையின் மாயம்தான் அது என்று சொல்லிக் கொண்டிருக்க முடியாது.  ஆனால் ஸர்ப்பகந்தாவினாலும் இருக்கலாம்.  ஸ்கீஸோஃப்ரீனியாவுக்கே மருந்தாயிற்றே?  இருந்தாலும் இன்னொரு காரணத்தையும் மனம் உசாவுகிறது.  ராம்ஜிதான் அது.  Zelig என்ற வூடி ஆலனின் படம் … Read more

மாயா இலக்கிய வட்டம் : உரையாடல்

நேற்றைய Zoom சந்திப்பின் காரணமாக பூச்சியின் பக்கம் வர முடியவில்லை.  நேற்றுதான் பல தொழில்நுட்ப விஷயங்களைக் கற்றுக் கொண்டேன்.  மொத்தம் இரண்டு மணி நேரம் நடந்தது பேச்சும் உரையாடலும்.  அந்த இரண்டு மணி நேரமும் போனை கையிலேயேதான் பிடித்துக் கொண்டிருந்தேன்.  அது அவசியமில்லை என்று காயத்ரி சொன்னாள்.  ஆமாம்.  போனை ஒரு பக்கம் வைத்துக் கூட இருக்கலாம்.   அது பாட்டுக்கு சாய்ந்தபடியோ நின்றபடியோ நின்று கொண்டிருக்கும்.  அது ஏன் எனக்குத் தோன்றாமல் போயிற்று என்று தெரியவில்லை.  இன்னொரு … Read more