பூச்சி 79

எனக்கு ஒரு கனவு வந்தது.  ஒரு ஆள் என்னிடம் பிச்சை கேட்கிறான்.  அவனை நான் கண்டபடி அடிக்கிறேன்.  நேர்வாழ்வில் அப்படியெல்லாம் நான் வன்முறையில் ஈடுபடும் ஆள் இல்லை என்றாலும் கனவில்தான் தர்க்கம் எதுவும் இருக்காதே?  ஓ, இதைக் கூட பயமாக இருக்கிறது.   நாளை என் மீது கம்யூனிஸ்டுகளோ இந்துத்துவவாதிகளோ பெரியாரிஸ்டுகளோ பிரச்சினை கொண்டு வந்தால் இவன் கனவில் பிச்சைக்காரனை அடித்தவன், மனித விரோதி என்று வக்கீல் நோட்டீஸ் அனுப்புவார்கள்.  கனவைக் கூட வெளியே சொல்ல பயமாக இருக்கிறது.  … Read more

To You Through Me (6)

டியர் சாரு, அன்று சி.சு. செல்லப்பா உரையை லைவ்-ஆகக் கேட்க முடியாத சூழ்நிலை. உரை ஆன்லைனில் கிடைக்கும் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். உரைக்கான கட்டணம் ஜி-பே வழியாக அனுப்பியிருக்கிறேன். உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது உரைக்கான லிங்க் அனுப்புவீர்களானால் பயனடைவேன். எனக்கு சொந்த ஊர் வத்தலக்குண்டு. சி.சு. செல்லப்பாவின் தெரு இருந்த/இருக்கும் அதே தெருவில்தான் என் வீடும்.  எதிர் வரிசையில் இரண்டு மூன்று வீடுகள் தள்ளி அவர் வீடு. சின்ன வயதில் நாங்கள் எல்லாம் விளையாடுகையில் அவர் … Read more