பூச்சி 81

இன்று காலை பத்து மணிக்கு இந்தக் கணினியில் அமர்ந்தேன்.  சாப்பிட மட்டும்தான் இடையில் எழுந்தேன்.  முழுநாளும் அல்ஹலாஜின் கவிதைகளில் மூழ்கியிருந்தேன்.  கவிதையா அது.  சந்நதம்.  கடவுளோடு ஒன்றிய நிலை.  பரமஹம்ஸாவின் பித்தநிலை.  அல்ஹலாஜ் சூஃபி கவி மட்டும் அல்ல.  கலகக்காரர். தெருவில் நின்று போராடியவர்.  அடுத்த யேசு.  அந்தக் கட்டுரையை எழுத கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் படித்தேன்.  இரண்டு மணி நேரம் கணினியில் பேய் வேகத்தில் தட்டினேன்.  நரம்புகள் தெறித்து விழுந்தன.  ஒரு கிளாஸ் ஒயின் … Read more

பூச்சி 80

இஸ்லாத்தில் எனக்குப் பிடித்த இன்னொரு விஷயம், எந்தக் காரணத்துக்காகவும் – அதிலும் குறிப்பாக கடவுளின் பெயரைச் சொல்லி, ஆன்மீகத்தின் பெயரால் உடலின் இயல்பான இச்சைகளை அடக்க மாட்டார்கள்.  உலகில் உள்ள மதங்களிலேயே உடலை அடக்கி ஒடுக்காத ஒரு மதம் எதுவென்றால், அது இஸ்லாம்தான்.  அதிலும் குறிப்பாக, விசேஷமாக பெண்கள்.  முத்துசாமியின் நீர்மை என்ற கதையைப் படித்திருக்கிறீர்களா?  அசோகமித்திரனின் இருவர் என்ற கதையைப் படித்திருக்கிறீர்களா?  லா.ச.ரா.வின் பாற்கடல் என்ற கதையைப் படித்திருக்கிறீர்களா?  நீர்மையில் வரும் அந்தப் பெண்மணிக்குப் பெயர் … Read more