கனவும் நனவும்
என் கனவில் வரும்கதைகளும் கவிதைகளும்நனவில் வந்திருந்தால்நான்உலக மகா எழுத்தாளனாகிஇருப்பேன்.
என் கனவில் வரும்கதைகளும் கவிதைகளும்நனவில் வந்திருந்தால்நான்உலக மகா எழுத்தாளனாகிஇருப்பேன்.
என் அனுபவம்என்னுடையதுஅதை கோடிக்கணக்கானமானுடரின் மொழியில்சொல்ல வேண்டியிருப்பதுகொடிய விதி
அந்த மலையடிவாரத்தில்நாம்முத்தமிட்டுக்கொண்டிருந்த போதுநாமிருவரும்உயிருடனிருந்தோமென்றாநினைக்கிறாய்?
நினைப்பதைச் சொல்ல மொழி நானும் சொல்லி வந்தேன் நினைப்பதையே எழுதி வந்தேன் அப்படித்தான் நம்பி வந்தேன் எல்லோரும் என்னை நிர்வாண மனிதன் என்றார்கள் ஆனால் உன்னிடம் வார்த்தைகள் உறைந்த பனியாய் நிற்கின்றன எல்லோரிடமும்தான்
என்னிடம் உரையாடும் மைனா பட்சியினம்தானென்றாலும் நல்ஞானமும் நேர்கொண்ட பார்வையுமுண்டு இன்று வந்து கேட்டது: ’பெண்களுக்கேன் பிராணிகளைப் பிடிக்கிறது?’ ஆயுள் முழுதும் பெண்களுடனே இருந்தும் அந்த வேற்றுக்கிரக ஜீவிகளைப் புரிந்து கொள்ள முடிந்ததில்லை யென்றேன் ’அது ஒன்றுமில்லை பிராணிகள் கேள்வி கேட்பதில்லை’ யோசிக்கத் தொடங்கிய என்னை இடைமறித்து ‘நீயும் பிராணிதான்’ எனச் சொல்லிப் பறந்தது
மனையாளிடம் நான்கு நாள்பரோல் கிடைத்ததுவழக்கமாய்ச் செல்லுமிடம்கணக்கில் இல்லைமோகினிக்குட்டிவேலைப்பளுவில்என்ன செய்யஏற்காடாகோவாவாஊட்டியாஅவளிடமே கேட்டேன்’லூசா நீஇங்கே வா’ ’ஐயோநீ பிஸியாச்சே’ ’அது கிடக்கட்டும்எனக்கும் ஒருப்ரேக் வேண்டாமாஎப்போது வருகிறாய்’ இப்போதுஊண் ருசிக்கிறதுஉறக்கம் இனிக்கிறதுஎந்நேரமும் அழையுங்கள்சத்தியமாய் பேசுவேன் இனியெனக்குஇவ்வுலகம் இனியதுவானம் இனிமையுடைத்துகாற்று இனிதுதீ இனிதுநீர் இனிதுநிலம் இனிதுநீ இனிதுநான் இனிதுஅவள் இனிதுஇனிதுஇன்றுஇனிதுஎல்லாமே இனிஇனிது