சாராயக் கவிதை

ங்கொய்யாலகடைசீலஏஐய்யை கேட்டுஅது சொன்னபடிசெஞ்சுநாமளும் ப்ளூ டிக்கைமறச்சிட்டம்லஎன்ன நக்கல் புண்டயாவாடீ வாஇப்ப வச்சுக்குவோம்வெளயாட்ட என்னாகுடிச்சிட்டு ஒளர்றனாஆமான்டி குடிச்சேன்அதுக்கு என்னாஆனா ஒளற்லகுடிச்சா நா(ங்) ஒளற மாட்டெ(ங்)எ(ங்) ஃப்ரன்ஸ்ங்க கிட்டகேட்டுப் பாரு என்னது சாராய நாத்தமாஆமாகேரளத்து சாராயம்ஒரு ஃப்ரெண்ட் குடுத்தான்என்னாங்ற இப்போவா நீயு(ங்) குடி நடு ராத்திரிகுப்பெ மேட்டு மேலசாராய குப்பிய ஒடச்சுநெலா வெளிச்சத்லநாம சிரிச்சாஇந்த உலகத்தையேஎரிச்சிர்லாம்லடீ? இன்னோண்ணுநீ குடிச்சுப் பாத்துருக்கெ(ங்)போதையாயிப் பாத்ததில்லசாராயொ(ங்) போதெ வரு(ங்)செம போதெநீ போதையாயிப் பாக்கணுன்டிஏன்னாநீ எனக்கு அனுப்பி வச்சஅத்தன கவிதையும்நீபோதெல எழுதுனதுதான்னுநீதானெ சொன்னெ?வாகுடிப்போ(ங்)குடிச்சிக்கிட்டே கவிதையெழுதிகொண்டாடுவோ(ங்) ஆனாஒரு … Read more

பிரதீத்ய சமுத்பாதம்

கடவுள் வந்தார்கேட்டார்ஏன் அழைத்தாய் சொல்தீர்க்க முடிந்தால் தீர்ப்பேன் நன்றி சொன்னேன்“ஆனால், அது என்ன ‘முடிந்தால்’?பிரபஞ்சத்தைப் படைத்தவர் நீர்,உம்மால் முடியாதது உண்டோ?” மானுடரின் புலம்பல்கள் புரிவதில்லைபுரிந்தாலும்சிலவற்றைத் தீர்ப்பதுஎன் சக்திக்கு மீறியதுநேற்று ஒரு பெண் அழைத்தாள்அவளுக்கு உடலின்பம் வேண்டும்இணையனுக்கோ இஷ்டமில்லைஇஷ்டமில்லையா இயலவில்லையாதெரியவில்லைஎன்னால் என்ன செய்ய முடியும்?கை விரித்துமன்னிப்புக் கேட்டேன்இப்போது ஒரு பயம்என் மன்னிப்பை வைத்துஅவள் என்னைமீட்டூவில் போட்டு விடுவாளோ? சரி நீ சொல்என்றார் ’மோகினிக்குட்டி ப்ளூ டிக்கைமறைத்து விட்டாள்நித்திரை தொலைந்துமனம் தற்கொலையுணர்வில் தவிக்கிறதுஅடுத்தவர் சுதந்திரத்தில்தலையிட்டதில்லைஅதையும் மீறி ஒருமுறை கேட்டுமொக்கை வாங்கினேன்அதோடு … Read more

கவிதை

”கடந்த வாரக்கவிதைகளை அனுப்பு” “ஆ, உனக்கு எப்படித் தெரியும்?என் இதயத்தில் ரகசியக் கேமராவைத்து விட்டாயா?” “கனவுதான் என் ரகசியக் கேமராநனவில் நானொரு மூடன்கனவில் தரிசிசரி, என் கேள்விக்குப் பதில் சொல்” ”முடியாது” சொன்னவள்எனக்குத் தன்உடல் பொருள் ஆன்மாதந்தவள்ஆக,ஆக ரகசியமானது

முடியாது

இதுவரைமுடியாது என்ற வார்த்தை கேட்டதில்லைஇப்போது அடிக்கடி கேட்கிறேன் ஏன் இப்படி ப்ளூ டிக்கை மறைத்து விட்டாய்காரணமாவது சொல்

என்றும் இல்லை இறுதிக் கோப்பை

மனையாள் சொன்னாள்:”தவறாக நினைக்காதேஆயுள் முழுதும் அசைவம் தின்றாய்இப்போது உன் உடல் அதை ஏற்கவில்லை” சாகும் வரை சாப்பிடுவேன் என்றேன். மோகினிக்குட்டி சொன்னாள்:”தவறாக நினைக்காதே,காமத்தில் வாழ்ந்தாய்மூழ்கினாய்இப்போது உன் உடல் அதைத் தாங்கவில்லை,கண்கூடாய்க் கண்டேன்போதும்.” “இந்தக் கதை கேள்:முப்பத்தைந்தில் புகாவ்ஸ்கிரத்த வாந்தி எடுத்தான்,ஆசனத்தில் குருதி கொட்டியது.மருத்துவர் எச்சரித்தார்:‘இன்னொரு கோப்பை மது அருந்தினால்,அது உன் இறுதிக் கோப்பை.’ஆனால், அவன்தினம் மூன்று முதல் ஏழு போத்தல்வைன் குடித்தபடி,முப்பத்தெட்டு ஆண்டுகள் வாழ்ந்தான்.அதனால்நான் சாகும் வரை காமம் தின்பேன்.”