நிர்பயா (2) – சொர்க்கத்தின் விதிகளை நரகத்தில் பேசாதீர்கள் நண்பர்களே!
நிர்பயா கட்டுரையின் தொடர்ச்சி இது: இந்தியா ஒரு நரகம். துப்புரவு தொழிலாளியின் சம்பளம் இங்கே 7000 ரூ. என் பகுதியில் 5000 ரூ. தினமும் அவர்கள் என் வீட்டுக்கு வந்து பிச்சை கேட்கிறார்கள். 50 ஆண்டுகளுக்கு முன்பே நாகூரில் நான் வாழ்ந்த சேரியில் சோற்றுப் பிச்சை. இப்போது நவீன காலம். சோற்றுக்குப் பதில் ரூபாய். நூறு இருநூறு என்று. மத்திய வர்க்க மென்பொருள் பொறியாளனின் ஊதியம் ஒன்றரை லட்சத்திலிருந்து மூன்று லட்சம் வரை. இதே சென்னையில். … Read more