தேரி காண்ட் மே தண்டா தேதூங்கா…

இதோ பாருங்க… நேரடியா விஷயத்தைச் சொல்லிடுங்க. இனிமே இந்திதான் எல்லோரும் படிக்கோணும். எழுதோணும். தாய் மொலி நாய் மொலி. மதறாஸீங்கள்ளாம் காய்கறிக்காரங்க கிட்டேயும் குப்பை அள்றவண்ட்டயும் தமில்லெ பேசுறாப்ல எல்லா நாய்ங்களும் தாய் மொலிய காய்கறிக்காரண்ட்டயும் குப்பை அள்றவண்ட்டயும் பேசி மொலிய வளருங்க. மத்தபடி ஒலக அரங்குல இந்தி பேசுனாதான் மரியாதை. இனிமே எல்லாரும் இந்தீலதான் பெற்றோர்ட்ட பேசணும். இந்தீலதான் பரீக்ஷைலாம் எழுதணும். மோடிஜீயைப் பாருங்க. அவரோட தாய்முலி குஜராத்தி. அவரு இந்திய எப்பூடிப் பேசுறாரு. வாஜ்பாயி … Read more

அய்யனார் விஸ்வநாத் – சாரு நிவேதிதா உரையாடல்

அய்யனார் விஸ்வநாத்துடனான உரையாடல் புதிதாக வேறொரு திசையில் திரும்பியிருக்கிறது. இந்த முறை அய்யனார் கேட்ட கேள்விக்கு நான் பதில் எழுத ஆரம்பித்திருக்கிறேன். இதுதான் பதிலின் ஆரம்பம். இன்னும் எழுத நிறைய உள்ளது. சந்நதம் வந்தது போல் தட்டச்சு செய்தேன். எவ்வளவு நேரத்தில் அடித்தேன் என்று தெரியவில்லை. படு வேகத்தில் அடித்தேன். கை நரம்பெல்லாம் நடுங்கி விட்டது. இதைத் தனியாக ஒரு புத்தகமாகவே கொண்டு வந்து விடலாம் என்று தோன்றுகிறது. பார்க்கலாம். அய்யனார் விஸ்வநாத்: தமிழ் இலக்கியச் சூழலில் … Read more

பிக் பாஸ் – 7

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சேரன் அப்பா அப்பா என்று சொல்லிக்கொண்டு செய்த அயோக்கியத்தனம் பற்றி நான் தொடர்ந்து சில பதிவுகளைப் போட்டேன். அயோக்கியத்தனம் என்று சொன்னது அவர் லாஸ்லியாவைத் தடவுவது பற்றி அல்ல. அதை ஆட்சேபிக்க வேண்டியது லாஸ்லியாவே தவிர நான் அல்ல. நான் ஆட்சேபித்தது, கவினையும் லாஸ்லியாவையும் சேரன் அடக்க நினைத்ததை. அவர்கள் இருவரையும் அவர் தன் அடிமைகள் போல நடத்த முனைந்ததை. சேரன் என் மீது கேஸ் போட்டு கோர்ட்டுக்கு இழுத்தால் அலைச்சல்தான் எனக்கு. … Read more

பழி – சிறுகதை – அமல்ராஜ் ஃப்ரான்சிஸ்

நான் படித்த மறக்க முடியாத சிறுகதைகளில் இதுவும் ஒன்று. இதெல்லாம் அச்சு ஊடகத்தில் வர முடியாத நிலை இங்கே நிலவுகிறது. அதனால் அமல்ராஜ் ஃப்ரான்சிஸ் எழுதிய இந்தக் கதையை உங்களுக்கு வாசிக்க அளிக்கிறேன். *** பழி முதலாவது அடியே சாமுவேலின் முகத்தில்தான் விழுந்தது. வீறிட்டுக் கத்திக்கொண்டு எழுந்த போது பின்னால்  நின்றவன்  தன் பங்கிற்கு கையிலிருந்த கத்தியை எடுத்து சாமுவேலின் மேல் இடுப்பில் சொருகினான். கூரிய கத்தி முள்ளந்தண்டை விலத்திக்கொண்டு சதக்கென்று விலாக்கூட்டிற்குள் இறங்கிற்று.  சாமுவேல்  சுதாரித்துக்கொண்டு  … Read more

பிக் பாஸ் (3) – 6

சேரனைப் போன்ற அராஜகப் பேர்வழியை நான் தினசரிகளில்தான் படித்திருக்கிறேன். அவருடைய (நிஜ) மகள் அவர் மீது போலீஸில் புகார் கொடுத்தார் என்ற செய்தி இப்போது எனக்கு ஞாபகம் வருகிறது. தன் காதலைத் தடுத்து, தன் காதலனை மிரட்டுகிறார் என்றே அவர் புகார் கொடுத்தார். இப்போது அவர் லாஸ்லியா – கவின் விஷயத்தில் நடந்து கொள்வதெல்லாம் பச்சை அயோக்கியத்தனம். கேவலம்.

பிக் பாஸ் (3) – 5

மரியாதைக்குரிய சாரு அவர்களே            சற்று நேரம் முன்பு தான் தாங்கள் எழுதிய பிக் பாஸ் கட்டுரைகளைப் படித்தேன். இப்படிப்பட்ட கேவலமான, தேவையற்ற மன விசாரணைகளை ஊக்குவிக்கும் நிகழ்ச்சி இளைஞர்கள் மத்தியில் தேவையா? ஏன் இந்தப் பெரிய அளவிலான நிறுவனங்கள் இப்படி குரூரமாக சிந்திக்கிறார்கள்?       ‌‌‌‌ ப.லட்சுமி நாராயணன். அன்பு நண்பருக்கு… நீங்கள் என் எழுத்தை இன்னும் நிறைய வாசிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். வாசித்தால் … Read more