சிறுகதை எழுதுவது எப்படி?

நேற்று ஒரு சம்பவம் நடந்தது.  அந்தக் காலத்தில் வெற்றிலை போடுபவர்கள் எச்சிலைத் துப்ப ஒரு குடுவை மாதிரி ஒன்று வைத்திருப்பார்கள், கேள்விப்பட்டிருக்கிறீர்களா அல்லது பார்த்திருக்கிறீர்களா?  அதன் பெயர் மறந்து விட்டது.  ஐந்து நிமிடத்துக்குள் தேவை.  குமுதத்துக்கு இந்த வாரம் கட்டுரைக்கு பதிலாக ஒரு கதை அனுப்பினேன்.  அந்தக் கதைக்குத் தேவை.  பெயர்கள் மறந்து போவது பற்றிய கதை.  அதை எழுதிக் கொண்டிருக்கும்போதே ஒரு பொருளின் பெயர் மறந்து விட்டது.  தொண்டையில் நிற்கிறது.  வரவில்லை.  ராம்ஜிக்கு போன் போட்டேன்.  … Read more

ஜானின் மகளுக்குக் கல்யாணம்

எங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள மூன்று வாட்ச்மேன்களில் ஒருவர் ஜான்.  ஜானின் மகளுக்குக் கல்யாணம்.  என்னிடம் நாலாயிரம் பணம் கேட்டாள் அவந்திகா.  உயிரையும் எழுத்தையும் தவிர அவள் எது கேட்டாலும் கொடுப்பேன் என்பதால் கொடுத்தேன்.  நாலாயிரம் ஜானுக்குக் கை மாறியது.  மற்ற குடித்தனக்காரர்கள் அதிர்ச்சியும் வெளியே காட்டிக் கொள்ள முடியாத கோபமும் அடைந்தார்கள்.  ஒருத்தர் வெளிப்படையாகவே கேட்டார்.  ”ஏன் மேடம், இது ரொம்ப ஜாஸ்தி இல்லையா?”  “என்னிடம் பணம் இல்லை.  இருந்திருந்தால் நானே கல்யாணம் செய்து வைத்திருப்பேன்” … Read more