ஆத்மவதம்

மரப்பாச்சி பொம்மைக்குசீலை கட்டிதலை வாரிசடை பின்னிபால் அன்னம் ஊட்டிய சிறுமியிடம்ஒருத்தி சொன்னாள்:”ஏய் மூடத்திஅது வெறும் மரக்கட்டைஅதற்கு உயிரில்லை.”அன்றிலிருந்துமனநலம் குன்றினாள் சிறுமி ஒருவன் தன்னைஞானியென சொல்லி வந்தான்ஒருத்தி அவனிடம்“அனுபவத்தில் சொல்கிறேன்நீ ஞானியல்லபைத்தியம்” என்றாள்அன்றிலிருந்துபைத்தியமானான் ஞானி

பனிக்காட்டில் தனித்திருப்பவன்

1 மைனாவின் பாடல் கேட்பதைசெவிகள் நிறுத்தி விட்டனதேன்சிட்டின் இசையும் தொலைந்து போயிற்றுஇரவுநட்சத்திரங்களின் ஒளியை மறைக்கிறதுநிலவு ஒரு மங்கிய கண்ணாடிசொற்கள் என்னை விட்டு ஓடி விட்டனவாசிப்பு கானல் நீர்சலன சித்திரங்கள் அர்த்தமற்ற நிழல்கள்சிநேகத்துடன் பழகி வந்தவிருட்சங்களும் கைவிட்டனநாய் பூனை என் குரல் மறந்தனநித்திரை தூரத்து நினைவுஊணும் சுவை குன்றியதுகனவுகளால் வேட்டையாடப்பட்டுகவிதையில் தஞ்சமடைகிறேன் 2 மனிதர் யாவரும் ஒருவரையொருவர்காயப்படுத்திக் கொள்கிறார்கள்ஆனாலும்ஒருவர் மீதொருவர்அன்பு செலுத்துவதாகவே நம்புகிறார்கள்அன்பின் மொழியை மட்டுமேகவிதையாக்குவதாகநான் நம்புவதைப் போல

இசையெனும் உன்மத்தம்

பெட்டியோ நாவலில் வரும் நாயகி நயநதினி ஒருமுறை Samuel Barber Adaggio for Strings பாடலை இரவு முழுவதும் கேட்டு இறுதியில் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவாள். மோகமுள்ளில் யமுனா ஒரு ஹிந்துஸ்தானி இசை கேட்டு செத்து விடலாம் போலிருக்கிறது பாபு என்று சொல்வாள். பரவசத்தின் உச்சத்தில் அப்படித் தோன்றும். PD1 90187 bex dc paidsocial dv video youtube nomatterwhat edge ind en 16×9 15 சில தினங்களுக்கு முன் ஸ்ரீ மேரி ஹம் … Read more

தாளிடப்பட்ட கதவின் மௌனம்

1 கஞ்சா மயக்கத்தில்சிறுதுளி சர்க்கரையும்கோஹிநூர் வைரமாய்த் தெரியும்அப்படித்தான் நீபேனைப் பெருமாளாக்கிஎன் கையில் திணிக்கிறாய். மறுக்கிறேன்கவிதை எழுதச் சொன்னது நீங்கள்இப்போது வார்த்தைகள் கவிதையாகிஎன் விரல்களை மீறி வழிகின்றனநிறுத்தும் வழி தெரியவில்லைஒவ்வொரு எழுத்தும் நீங்களேஎழுதி ஈரம் காய்வதற்குள் உங்கள்பார்வைக்கு வருகிறதுஎந்த அவசரமுமில்லைவாய்த்த நேரத்தில் வாசிக்கலாம்ப்ளூ டிக் ஒரு சிறு மகிழ்ச்சி அது என்னதிடீரென்று நீங்கள்? பாராட்டு தேவையில்லைசன்மானம் கேட்கவில்லைவாசித்த விவரமறிந்தால்ஒரு மெல்லிய மகிழ்ச்சிஅதற்கும் தாளிடுபவர்களைவேறெப்படி அழைப்பது? 2 நீயில்லாமல்என் கவிதையில்லைநீ அதை வாசிக்கையில்-அது ஒரு நதியின் நிழலாய்என் கரையையும்உன் மௌனத்தையும்இணைக்கிறது

அன்பின் சிறு கதவை மூடாதீர்கள்

1 தினந்தோறும்எந்தப் பிணக்கும் இல்லாமல்ஞாயிறு எழுகிறதுநிலவு குளிர்மை பொழிகிறதுதென்றல் வருடிச் செல்கிறதுமலர்கள் மணம் வீசுகின்றனயாரையும் கேளாமல்நதிகள் பாடுகின்றனமலைகள் கேட்கின்றனபறவைகள் பறக்கின்றனவனங்களைப்பெருக்குகின்றனவிலங்குகள் பூமியின்லயத்தைப் பராமரிக்கின்றனவானம் இடமளிக்கிறதுமழை பூமியைக் குளிர்விக்கிறதுவானவில் மழைத்துளியில் மலர்கிறதுநதிகள் மலைகளின் கதைகளைப் பாடுகின்றனமரங்கள் மௌனமாக உலகின் சுவாசத்தைத்தாங்குகின்றனமூங்கில் காடுகளிலிருந்து இசைபிறக்கிறதுபூமி தன் மடியில்ஆயிரம் கனிகளையும்தானியங்களையும் தருகிறதுகடல் தன் அலைகளால்ஜீவராசிகளைத் தாலாட்டுகிறதுவனங்கள் விலங்குகளும்ஞானிகளும் வசிக்கஇடமளிக்கிறதுஞானிகளின் தவம் உலகைக் காக்கிறதுதேனீக்களும் பட்டாம்பூச்சிகளும்மண்புழுவும் மாடும் ஆடும்தேன்சிட்டுகளும் பஞ்சவர்ணக்கிளிகளும்குதிரைகளும் ஒட்டகங்களும்ஆனைகளும் பூனைகளும்நாயும் முயலும்எல்லாமேஎல்லாமேதன் இயல்பில் அன்பைப் பகிர்கின்றனஒரு மரம் கூடதன் நிழலை … Read more