புத்தக விழா 5

வரும் 18-ஆம் தேதி மாலை ஏழு மணிக்கு சென்னை புத்தக விழாவின் எழுத்தாளர் முற்றம் என்ற அரங்கில் என் எழுத்துலகை அறிமுகம் செய்து வைத்து காயத்ரி பேசுவார். நானும் பேசுவேன். கலந்துரையாடலும் நடக்கும். நேற்று வரை நடந்த எழுத்தாளர் அறிமுக நிகழ்வுகளில் ரெண்டு மூணு பேர் மட்டுமே வந்திருக்கிறார்கள். அதனால் நிகழ்வுகள் எப்படி இருந்திருக்கும் என்று உங்கள் யூகத்துக்கே விட்டு விடுகிறேன். இதெல்லாம் எழுத்தாளர்களை அவமானப்படுத்தும் விஷயம் இல்லையா? இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் பாரதி புத்தகாலய நண்பர்கள் … Read more

புத்தக விழா 4

பிரமாதமான எலந்த வடை கிடைத்து விட்டது. காதி க்ராமோத்யோகில் வாங்கினாராம். இனி எலந்தவடை வேண்டாம். பெரும்பாலான ஆட்டோக்காரர்கள் முரடர்களாகவும் வழிப்பறிக் கொள்ளையரைப் போலவும் நடந்து கொள்கிறார்கள். நேற்று மைலாப்பூரிலிருந்து நந்தனம் போக 150 ரூ வாங்கிக் கொண்டு வாசலிலேயே விட்டுவிட்டுப் போய் விட்டார். வாசலிலிருந்து உள்ளே போக ஒரு கிலோமீட்டர். சிரமப்பட்டு நடந்தேன். 100 ரூ. தூரம். இதில் பாதியிலேயே இறக்கி விட்ட கொடுமை. இன்று சரியாக மாலை நான்கு மணிக்கு வீட்டிலிருந்து கிளம்புவேன். யாரேனும் பைக்கிலோ … Read more

புத்தக விழா – 3

நேற்று புத்தக விழா முதல் நாள். ஆறு மணிக்குப் போனேன். எடப்பாடி மேடையில் நின்று படித்துக் கொண்டிருந்தார். திருவள்ளுவர் என்று காதில் விழுந்தது. எந்தக் கெடுபிடியும் இல்லை. ஏதோ முனிசிபல் கவுன்சிலர் ரேஞ்சுக்குத்தான் இருந்தது. இதுவே ஜெயலலிதா என்றால் காட்டு தர்பாராக இருந்திருக்கும். இதற்கே எடப்பாடிக்கு மக்கள் திரும்பவும் ஓட்டுப் போடுவார்கள் போல் தெரிகிறது. சென்ற வருடமே புத்தக விழா ஈ ஓட்டியது என்றேன். இந்த ஆண்டோ அந்த ஈ கூட இல்லை. மயான அமைதி. புத்தக … Read more

புத்தக விழா – 2

வரும் 18-ஆம் தேதி மாலை ஏழு மணிக்கு சென்னை புத்தக விழாவில் உள்ள Writers Corner என்ற அரங்கில் என்னுடைய படைப்புகள் பற்றி அறிமுகம் செய்து உரை ஆற்றுகிறார் காயத்ரி. நானும் பேசுகிறேன். ஆர்வம் உள்ளவர்கள் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.

சென்னை புத்தக விழா – 1

ராஸ லீலா கலெக்டிபிள் தயாராகி விட்டது. அதை புத்தக விழாவில் என்னிடம் வாங்கிக் கொள்ள விருப்பம் உள்ளவர்கள் எனக்கு மின்னஞ்சல் செய்யலாம். மற்றவர்களுக்கு என் கையெழுத்துடன் கொரியரில் அனுப்பி வைக்கப்படும். charu.nivedita.india@gmail.com 2. புத்தக விழாவுக்கு தினமும் வருவேன். சென்ற ஆண்டைப் போல் மதியம் மூன்று மணிக்கே வந்து வெட்டியாக மோட்டுவளையைப் பார்த்துக் கொண்டிருக்க விருப்பம் இல்லாததால் தினமும் மாலை ஐந்து மணிக்கே வரலாம் என்று இருக்கிறேன். எனவே என்னைச் சந்திக்க நினைப்பவர்கள் மாலை ஐந்து மணிக்கு … Read more

ஒரு உதவி

யு.எஸ்.ஸிலிருந்து சில நூல்களை சென்னைக்கு எடுத்து வர வேண்டும். வெய்ட் அதிகம் இருக்காது. மொத்தமே ரெண்டு கிலோதான் இருக்கும். சென்னை வந்ததும் ஃபோன் செய்தால் நண்பர்களை அனுப்பி வாங்கிக் கொள்வேன். அல்லது, கொரியர் செய்து விடலாம். யு.எஸ்.ஸிலிருந்து யாரும் இங்கே வருகிறீர்களா? எழுதவும். charu.nivedita.india@gmail.com