கண்ணாடியின் கனவு

மதுபான விடுதியில்மங்கலான வெளிச்சம்பழைய மரமேசையைஒரு புத்தகத்தின் பக்கமாக மாற்றியதுஎழுத்தாளர்களும் கலைஞர்களும் மட்டுமேவந்து போகும் அந்த இடத்தில்,அவளும் நானும் எதிரெதிரே.என் கையில் வைன், பழமையின் பிரதிபலிப்புஅவள் கையில் விஸ்கி, ஒரு மறைபொருளின் மணம் காலம் ஒரு பிரமையின் கனவாககோப்பைகளில் தயங்கி நின்றதுஎன் வாழ்க்கையை எழுது என்றேன்அது ஒரு விநோத நூலகத்தின்தொலைந்து போன கையெழுத்துப் பிரதி மோகினிக்குட்டி ஒரு கவியாஎன் கதையை உருவாக்குமொரு கனவாபுன்னகையுடன்விஸ்கியை மெல்ல அருந்தியபடிஒரு விநோதம் சொல்லென்றாள்.அவள் கண்கள் அந்த இருளிலும்ஒளி பூண்டிருந்தன நான் சொன்னேன்:ஏழெட்டு பெண்கள்ஏழெட்டு … Read more

நிலவுக்கும் எனக்குமான தூரம்

வன்மதுவை ரசித்து அருந்தும்யுவதிகள் சொற்பம்நானே மென்மது குடிப்பவன்தான்இறையருளோபிரார்த்தனையின் பலனோமோகினிக்குட்டி வன்மதுப் பிரியைசாத்தியெடுப்பாள் விஸ்கியைகொடுப்பினை என்னவென்றால்குடித்தால் அவள் காதலும் அன்பும்தயையும் அருளும் பொங்கி வழியும அதனாலே நாங்கள் அடிக்கடிசெல்லுமிடம் மதுக்கூடம்அங்கே ஒரு பிரச்சினைமோகினியைக் காண்பதுஆடிக்கொரு முறை அமாவாசைக்கொரு முறைசமயங்களில் உருவமே மாறியிருப்பாள்அருகே அமர்ந்தால்எதிரே உட்கார் என்பாள் எதையும் எவரிடமும் எதிர்பார்க்காதேஎதிர்பார்த்தால் ஏமாற்றம்ஏமாற்றம் மன உளைச்சல்மன உளைச்சல் சுயவதைநானொரு சுயநேசி என்பதால்எதிர்பார்ப்பை ரத்து செய்வேன்ஆனால் விதிக்கு ஒரு விலக்கு வைத்துஒருநாள்மாட்டேனென்றேன் பைத்தியமா நீபக்கத்தில் உட்கார்ந்தால்தலையை ஒரு பக்கம் திருப்பிப்பார்த்தபடி இருக்க … Read more

வரமும் சாபமும்

அந்த வீட்டில் ஆறு குழந்தைகள்மூணு பெண் மூணு ஆண்அன்றாடங்காய்ச்சிஅப்பன் உழைப்பாளிஅம்மையும் உழைப்பாளிஇருந்தும் ஒரு வேளைதான்வயிறார முடிந்ததுமறு வேளை பசித்தால்கிடைத்தது தண்ணீர்காலை நீராகாரத்தில்கைவிட்டு அளைந்தால்பருக்கைகள் ரெண்டு கிடைக்கும் ஆனாலும் அம்மையின் நம்பிக்கை மங்கவில்லைபாலும் தேனும் இந்த வீட்டில் பொங்குமென்பாள்மாதாமாதம் அதிகாலை நாலு மணிக்கேவாசலில் வந்து நின்று குடுகுடுப்பை அடித்துஎல்லோரையும் எழுப்பிநல்ல காலம் பாடும்குடுகுடுப்பைக்காரனின் குரல்தான்அம்மையின் நம்பிக்கை ஒளி மூத்தவன் தில்லி செல்வான்அடுத்தவளுக்கு அரசாங்க உத்தியோகம்மூன்றாமவனுக்குப் பட்டாளத்துப் பணிநான்காமவள் செல்வந்தர் மருமகள்ஐந்தாமவன் வணிகத்தில் கொழிப்பான்ஆறாமவள் மருத்துவப் பணி பக்கத்தில் பெருமாள் … Read more

நிச்சலனத்தின் நிகழ்வெளி: புதுவை இளவேனில்

இந்த அரிய பொக்கிஷம் பற்றி எழுத வேண்டும் என்று நீண்ட நாட்களாக நினைத்துக்கொண்டிருந்தேன். இன்றுதான் நேரம் கிடைத்தது. ‘ தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் இசைக் கலைஞர்கள் குறித்த அரிய புகைப்படங்கள் இந்நூலில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. எல்லாம் புதுவை இளவேனில் எடுத்தவை. எல்லாமே கலைப் பொக்கிஷங்கள். ஒருவரின் தோற்றம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், அவரை இந்த உலகின் அதியற்புத மனிதராக தன் புகைப்படக் கலையின் மூலம் மாற்ற வல்ல ஒளிக்கலைஞர் புதுவை இளவேனில். இதுவரை என்னைப் புகைப்படம் எடுத்தவர்களில் ஆகச் … Read more

மேல்கூரை மின்விசிறி

யுவதிகள்நாய்களையும் பூனைகளையும்தம் காதலரையும்தொட்டுகொஞ்சி விளையாடுவதைஅடிக்கடி காண்கிறேன்மோகினியிடம் கொஞ்சம்தன்னிரக்க பாவனையுடன் சொன்னேன்என்னை இதுவரை யாரும்தொட்டு கொஞ்சி விளையாடியதில்லையென அவள்,நீதான் தொட்டவுடன் என்னைமேல்கூரை மின்விசிறியைப் பார்க்கவைத்து விடுகிறாயேஎங்கே விளையாடுவதுஎங்கே கொஞ்சுவதுபோடா இடியட்என்று சொல்லியென்கன்னத்தைக் கிள்ளினாள் சே, அரிய வாய்ப்பை இழந்து போனேன்அன்றைய தினமும் அவள்மேல்கூரை மின்விசிறியையேபார்க்க நேர்ந்தது

தேனுகந்து பாடும் உன் அமுது

அவள் ஒரு பாடல் அனுப்பினாள்கேட்டேன்.நெஞ்சில் வந்து குடிகொண்ட நிலவுபரவசம் பரவசம் என்றதுஐயோ, இது சோகப்பாட்டு என்றாள்நான் சிரித்தேன் சோகமா? எங்கே இருக்கிறது?இசையில் சோகம் உண்டா?அது ஒரு பறவையின் றெக்கை,காற்றைத் தழுவி எல்லைகளைத் தாண்டுவதுகாதல் இசையின் நிழல்எப்போதும் தொடரும்எப்போதும் மாறும் இசை பிரபஞ்சத்தின் முதல் சொல்அதற்கு முன் மௌனம் கூட இல்லைசோகமென்று அவள் அழைத்தாலும்எனக்கு அது ஒரு மெல்லிய அழைப்புஎங்கோ ஒரு நட்சத்திரத்தின் கிசுகிசுப்பு. காதலும் இசையும் சொல்வதென்னவென்றால்.சோகம் ஒரு பெயர் மட்டுமேஆனால் பரவசம் தேன்மழைஎன் உயிரை உருக்கிநின் … Read more