ஒரு வேண்டுகோள்

சில வேண்டுகோள்கள் என்றுதான் போட வேண்டும். இருந்தாலும் வேண்டுகோள்கள் என்றால் அதில் லயம் இல்லை. அதனால் இலக்கணப் பிழை பரவாயில்லை என ஒரு வேண்டுகோள் என்று கொடுத்திருக்கிறேன். முதல் வேண்டுகோள். சில தினங்களில் நான் இரண்டு மூன்று கட்டுரைகளையோ கவிதைகளையோ இந்த இணையதளத்தில் வெளியிடுகிறேன். சில நண்பர்கள் அதில் மேலே இருக்கும் ஒரு கட்டுரையையோ கவிதையையோ மட்டும் படித்து விட்டு என்னிடம் பேச வருவார்கள். நான் அதற்கு முந்தைய கவிதை பற்றிப் பேசினால், நான் தினமும் படிக்கிறேனே, … Read more

Finale of a Symphony

1.அறிமுகம் தேவி!இதை ஒரு மனநோய் விடுதியிலிருந்துஎழுதுகிறேன்இங்கு நானாவித பைத்தியங்கள் வசிக்கிறோம் சிலர் மௌனத்தின் ஆழத்தில் மூழ்கியவர்கள்வார்த்தைகள் தொலைத்து விழிகளால் பேசுவர்சிலர் நெஞ்சில் புயல் கொண்டு நடுங்குவர்கிட்டத்தில் போனால் கோபத்தின் கூச்சலோடு தாக்குவர் சிலர் கண்ணுக்குப் புலனாகா உலகில் வாழ்பவர்மாயக் குரல்களோடு உரையாடுவர்நவரசமும் அவர் நாவில் நடனமிடும்சிலர் உடைந்த கண்ணாடியாய் உள்ளனர்கண்ணீரில் கரைந்து வலியில் தவிப்பர் சிலர் ஒளி மறந்து இருளில் மூழ்குவர்படுக்கையில் புதைந்து மௌனத்தில் தவிப்பர்சிலர் மாயப் புயலில் தொலைந்தவர்கள்கண்ணுக்குத் தெரியாத எதிரியுடன் போரிடுவர் சிலர் எரியும் … Read more

பிரபு காளிதாஸுடன் ஒரு காலைப் பொழுது

காலை ஐந்தேகால் மணிக்கு என் வீட்டுக்கு வருவதாகச் சொல்லியிருந்தார் பிரபு காளிதாஸ். நான் படுத்தவுடனேயே சவத்தைப் போல் தூங்கி விடுவேன். ஆனால் நேற்று இரவு இரண்டு மணி வரை தூக்கம் வரவில்லை. இது என் வாழ்வில் புதிய அனுபவம். எனக்கு வந்த ஒரு வாட்ஸப் மெஸேஜ் காரணம். என்னைச் சேர்ந்த எல்லோருமே என்னிடம் மூர்க்கமாகப் பழகத் தொடங்கி விடுவதால் அது எனக்கு ஆச்சரியமில்லை எனினும் அந்த மெஸேஜ் என்னை வெகுவாக பாதித்து விட்டதால் உறக்கம் வரவில்லை. காலையில் … Read more

புகைப்படக் கலை

புகைப்படக் கலையின் சில அடிப்படைகளை பாண்டிச்சேரியில் கற்றுக் கொண்டேன். அதாவது, என்னென்ன செய்யக் கூடாது என்ற விஷயங்களை. புகைப்படக் கலை பற்றி எதுவுமே தெரியாத நான் சில ஆண்டுகளுக்கு முன்பு லெபனானில் என் ஐஃபோன் மூலம் எடுத்த சில புகைப்படங்களைப் பார்த்து விட்டு மிஷ்கின் “இது ஒரு தேர்ந்த புகைப்படக் கலைஞரால் எடுக்கப்பட்டவை போல் இருக்கிறது” என்று சொன்னார். பொதுவாக என் நூல்களில் என் புகைப்படம் இடம் பெறுவதை நான் விரும்புவதில்லை. இருநூறு பிரதிகள் விற்கும் ஒரு … Read more

ஆண் பால் பெண் பால்

பூனை நாய்களின் பெண்ணினத்தை யாரும் அவள் எனக் குறிப்பிட்டால் என் செவியில் நாராசம் பாயும் பெண் பூனை பெண் நாய் ரெண்டையும் அவனென்றே அழைப்பேன் ஆனால் என் நண்பன் ஒரு படி மேல் மனிதப் பெண்டிரையும் அவனென்றே அழைக்கிறான் என்ன ஒரே கவிதை மழை என்றான் ஹி ஹி என்றேன் எழுதுவது நீ அல்ல நண்பா அவன் எழுதுகிறான் அவன் எழுதுகிறான் என்றான் குறும்பு பொங்க

பரவசத்தின் எதிரொலிகள்

இரவின் துடிப்பில்ஒரு பாடலின் விம்மலில்சிங்களப் பெண் நயநதினி முணுமுணுத்தாள்அவள் குரல்தொலைவில் மறைந்த போரின் நிழல்இரவு முழுதும் ஒரு பாடலைக் கேட்டாள்கொல்லப்பட்ட தந்தைதற்கொலையில் மாண்ட தாய்அவர்கள் முகங்கள் இசையின் நெய்யப்பட்டுகனவாகி மூச்சை முட்டியதுதிரும்பத் திரும்பக் கேட்டுவிடியலின் விளிம்பில்சுவாசத்தின் நூலை அறுக்க முயன்றாள்ஆனால் உயிர் எப்படியோ மீண்டது அவள் சொன்னாள்:’இசை வெறும் ஒலியல்லஎலும்பை எரிக்கும் ஞாபகம்அப்போது எனக்கு அது விளங்கவில்லை பின்னர் ஒரு பாடல் என்னைப் பற்றியதுஆயிரம் முறை ஒலித்து என்னை ஆட்கொண்டதுகாலை நடையில்வெயில் பொங்கும் பகலில்இரவின் மென்மையில்அது என் … Read more