வெகுஜன எழுத்தும் இலக்கியமும்

எக்ஸைல் பிழைதிருத்த வேலையை முடிக்கும் தறுவாயில் இருந்தேன். இடையில் ஒரு பஞ்சாயத்து வந்து விட்டது.  ”பட்டுக்கோட்டை பிரபாகரை ஏன் இப்படி அடிக்கடி வம்புக்கு இழுக்குறீர்கள்?”  அடப்பாவிகளா, உங்களுக்கு எத்தனை ஆயிரம் தடவை சொன்னாலும் புரியவே புரியாதா?  எனக்கு ஜனரஞ்சக எழுத்தின் மீது எந்தப் பகையும் இல்லை.  எந்தப் புகாரும் இல்லை.  ஒரு சமூகத்தில் எல்லா மனிதர்களுமே நகுலனையும் ஆதவனையும் படித்துக் கொண்டிருக்க முடியாது.  எனக்கே பதினைந்து மணி நேரம் தொடர்ந்து எழுதினாலோ படித்தாலோ ஒரு பத்து நிமிடம் … Read more

எழுத்தாளனும் ஆன்மீகவாதியும்…

ஃப்ரான்ஸ், ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளில் தத்துவவாதிகள்தான் இந்தியாவில் ஆன்மீகவாதிகளின் இடத்தில் இருப்பவர்கள்.  அங்கே ஆன்மீகவாதிகளுக்கு சமூகத்தை வழிநடத்தும் அளவுக்கு அதிகாரம் கிடையாது.   திருச்சபைகளின் அதிகாரம் ஒரு பக்கம் இருந்த போதிலும் தத்துவவாதிகளுக்கே அங்கே முதல் இடம்.  தத்துவவாதிகளின் பேச்சுக்குத்தான் அங்கே அதிக முக்கியத்துவம் கிடைக்கும்.  இங்கே மோடிக்கும் ஜக்கிக்கும், மோடிக்கும் ரவி ஷங்கருக்கும் உள்ள உறவை நினைத்துப் பாருங்கள்.  ஜக்கிக்கும் ரவி ஷங்கருக்கும் சமூகத்தில் உள்ள ஸ்தானத்தை கவனியுங்கள்.  ஆதிகாலத்திலிருந்தே இந்தியாவில் இப்படித்தான் இருந்து வருகிறது. … Read more

முகமூடிகளின் பள்ளத்தாக்கு – ஒரு மதிப்புரை

அன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய சாரு அவர்களுக்கு, இது தங்களுக்கு நான் எழுதும் முதல் வாசகர் கடிதம். கடந்த ஐந்து வருடங்களாக, சரியாகச் சொல்வதானால் என் கல்லூரியின் தொடக்க நாட்களிலிருந்து தங்களின் தீவிர வாசகன்.  தற்போது குடிமைப்பணித் தேர்வுக்காக தயார் செய்துகொண்டிருக்கின்றேன்.  உங்களது படைப்புகள் என்னில், எனது சிந்தையில், உலகை அணுகும்  பார்வையில், பிறவுயிரிகளை நேசிப்பதில் என்று அவை ஏற்படுத்திய தாக்கங்கள் மற்றும் மாற்றங்கள் அனேகம். அதைப் பற்றியெல்லாம் உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று அடிக்கடி தோன்றும் … Read more

எக்ஸைல்

ஸீரோ டிகிரி ஒரு cult நாவலாக மாறி விட்டது.  எப்படியும் ஒரு ஆண்டில் எழுநூறு எண்ணூறு பிரதிகள் போய் விடுகின்றன.  எனக்கு வரும் ராயல்டி ஸ்டேட்மெண்ட்டில் எப்போதுமே அதிகம் விற்ற புத்தகமாக ஸீரோ டிகிரிதான் இருக்கிறது.  அடுத்து, நண்பர்களிடையே பேசும்போது அவர்கள் அதிகம் குறிப்பிடுவதும் சிலாகிப்பதும் ராஸ லீலா.  யாருமே குறிப்பிடாத நாவல் காமரூப கதைகள்.  புறக்கணிக்கப்பட்ட நாவல் அது.  அடுத்து, யாரும் படிக்காத நாவல் என்று எக்ஸைலைச் சொல்லலாம்.  எப்போதுமே ஒன்றிரண்டு விதிவிலக்குகள் உண்டு.  ஸ்ரீராம் … Read more

தம்ரூட்டை முன்வைத்து ஒரு நீதிக்கதை (சிறுகதை)

நீதிக்கதை என்றால் ஒரு பக்கம் ரெண்டு பக்கம் இருக்கும்.  ஆனால் தருண் தேஜ்பால் எழுதிய நீதிக்கதை அறுநூறு பக்கம்.  பெரிய சாதனைதான்.  அதுவும் ஒரு நீதிக்கதையை த்ரில்லர் மாதிரி சொல்ல வேண்டுமானால் அதற்கு பயங்கரமான திறமை வேண்டும்.  பல வாசகர்கள் இலக்கியம் என்றால் நாட்டுக்கும் வீட்டுக்கும் நாலு நல்லதைச் சொல்ல வேண்டாமா என்றே கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  அவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற எழுத்தாளர் ஜெயமோகன். ஆனால் நமக்கே நல்லது எது கெட்டது எது என்று தெரியாதபோது நம்மால் எப்படி … Read more

யார் அந்த மூன்று பேர்?

ஜெயமோகனின் ஓஷோ பற்றிய பேருரையில் ஓஷோ அளவுக்குப் பிரபலமான மூன்று தமிழ் எழுத்தாளர்கள் என்று கூறுகிறார். கிசுகிசுவில் நான் தான் ரொம்ப வீக். ஜெயமோகன் சொல்லும் கிசுகிசுக்களுக்கு க்ளூவே தர மாட்டார். சுத்தமாகத் தொங்கலில் நிற்கும். நான் தரும் க்ளூக்களை வைத்துக் கண்டு பிடிக்க முடியாது என்றாலும் சில அசகாய சூரர்கள் கண்டு பிடித்து விடுகிறார்கள். இப்போது ஜெயமோகன் சொன்ன மேற்படி கிசுகிசுவால் காலையிலிருந்து மண்டையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறேன். மூவரில் ஒருவரைக் கண்டு பிடிக்க முடிகிறது. அது … Read more